டிச:14., கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சந்தித்தார், அவருடன் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இச்சந்திப்பில் சமீபத்தில் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நமது நாட்டின் முப்படை தளபதி, உட்பட 13 பேர் மரணமடைந்தனர். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த தனியார் யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டு இருந்தது அதில் ராணுவ தளபதி மரணம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக அவதூறு செய்தியை பதிவிட்டிருந்தது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கவும், மத , மோதலை தூண்டும் விதமாகவும் அவதூறு வீடியோ வெளியிட்ட இந்த யூடியூப் சேனல் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் அவர்கள் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் துரித நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்பில் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், கோவை மாநகர்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
ஆளுக்கொரு நீதி… சிறைவாசிகளின் கண்ணீரை கூறும் குறும்படம்…. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டு பாராட்டு…
சென்னை.டிச.14., 20 ஆண்டுகளை கடந்தும் தண்டனையை அனுபவித்து, விடுதலையாக வழியின்றி தவிக்கும் சிறைவாசிகளின் துயரம் இப்போது தமிழகத்தில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது. தற்போது ஆலந்தூர் மொய்தீன் இயக்கத்தில், கார்த்திகேயன் மற்றும் ஜப்பார் ஆகியோரின் தயாரிப்பில் ஆளுக்கொரு நீதி என்ற தலைப்பில் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப் படக்குழு மஜக தலைமையகத்திற்கு வருகை தந்து படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்க்க ஏற்பாடு செய்தது. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இக்குறும்படத்தை பார்த்து விட்டு, தனது பாராட்டுகளை தெரிவித்தார். இது வெளியிடப்படும் போது மக்களின் இதயங்களை உருக்கும் என்றும் கூறினார். விரைவில் இக்குறும்படம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பட முன்னோட்ட நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் ஷஃபி, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக் ஆகியோரும் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 13.12.2021
ஜனவரி_08 கோவை முற்றுகை போராட்டம்.!
ஜனவரி-08 கோவை சிறை முற்றுகை..! செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!! 10 பேருந்துகள் உட்பட 30 வாகனங்களில் புறப்பட சூளுரை..!!
சென்னை.டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது. மஜக-வின் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணிகளும், வாகனங்களை முன்பதிவு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்கள், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மஜக சார்பில் முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, கிளை செயலாளர்கள் பங்கேற்ற ஆயத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் துணை பொதுச் செயலாளர், N.A.தைமிய்யா அவர்களும், மாநில துணைச்செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் தாரிக் ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாவட்டம் எங்கும் சுவர் விளம்பரங்களை அதிகமாக வரைவது என்றும், 10 பேருந்துகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட
ஜனவரி-08 கோவை சிறை முற்றுகை..!! மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!! 7 பேருந்துகள் உட்பட 20 வாகனங்களில் புறப்பட சூளுரை..!!
சென்னை.டிச.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8, 2022 அன்று, ஆயுள் சிறைவாசிகளை பொதுமன்னிப்பின் கீழ், சாதி, மத வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது. மஜக-வின் சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணிகளும், வாகனங்களை முன்பதிவு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்கள், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக நேற்று (13.12.2021) மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக சார்பில் முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி, கிளை செயலாளர்கள் பங்கேற்ற ஆயத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் துணை பொதுச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான N.A.தைமிய்யா அவர்களும் பங்கேற்றார். இதில் மாவட்டம் எங்கும் சுவர் விளம்பரங்களை அதிகமாக வரைவது என்றும், 7 பேருந்துகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட இதர வாகனங்களில் கோவை சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு புறப்படுவது என்றும். அதற்காக மக்களைத் திரட்டும்