ஆக.13.,நாகப்பட்டினம் மாவட்டம் வானதிராஜபுரத்தில் இன்று (13.8.16) வாலிபால் போட்டியை மஜ௧ பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார். முன்னதாக மயிலாடுதுறை அருகில் சீனிவாசபுரம், வானதிராஜபுரம் ஆகிய ஊர்களில் ஜமாத் சந்திப்பும் நடைபெற்றது். பிறகு நீடுர் சென்று சமீபத்தில் மரணமடைந்த பேங்காக் தொழிலதிபர் டாக்டர் அய்யூப் இல்லத்திற்க்கு சென்று அவர்களுடைய குடும்பத்திற்க்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் மாலிக், பொருளாளர் ஷாஜகான், துணை செயலாளர்கள் ஷாகுல் ஹமிது, அபுசாலிஹ், நிர்வாகிகள் சலிம், நிஜாம், ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் : மஜக ஊடக பிரிவு நாகை வடக்கு
செய்திகள்
சுதந்திரதினத்தை கொண்டாடுவோம்….
ஆக.13.,நமது நாட்டின் 70 வது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 2016 அன்று கொண்டாடப்படும் நிலையில், அத்தினத்தை தமிழ்நாடு மற்றும் புதுத்சேரி மாநிலங்களில் #மஜக சார்பில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் கொடுத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சையாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி
நாகை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் MLA!
ஆக்.13., நாகையில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து sos என்ற தொண்டு நிறுவனம் அக்குழந்தைகளை சிறப்பாக வளர்த்து வருகிறது. நாடெங்கிலும் கிளைகளை கொண்ட அந்நிறுவனத்தின் சார்பில் இன்று நாகப்பட்டினம் EGS பிள்ளை பொறியியல் கல்லுரி வளாகத்தில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெலுங்கான உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து இந்தாண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகள் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று தொடங்கி வைத்து 'sos childrens village of india' நிறுவனத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் மஜக நிர்வாகிகள் சதகத்துல்லா, முபாரக், ஹமீத் ஜெகபர், சம்பத், கண்ணுவாப்பா, அஜீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல்; மஜக ஊடகப்பிரிவு நாகை தெற்கு
புதிய தலைமுறை நிகழ்ச்சியில்…
புதிய தலைமுறை தொலைக்காட்சி 6 ஆம் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அரசியல், கலை, இலக்கியம், சமூக சேவை, ஊடகம் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். (மஜக பொதுச்செயலாளர். M. தமிமுன் அன்சாரி MLA யுடன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை.சத்யா, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA,தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்) தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுக் குழு…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 12-08-2016 பூவிருந்தவல்லியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆணையூர் அக்பர் உசேன் தலைமை வகித்தார் .பூவிருந்தவல்லி நகர செயலாளர் பூவை. யாசர் அராபத் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன்,தலைமை கழக பேச்சாளர் பூவை அப்துல் காதர் மஜக பணிகள் குறித்தும் இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். அடுத்து பேசிய மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கையும் புதிய கல்வி கொள்கையின் பாதகங்களை விளக்கினார். நிறைவுரையாற்றிய பொதுச் செயலாளர் #தமிமுன்_அன்சாரி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி கடந்து வந்த பாதை குறித்து விரிவாக விளக்கினார். மேலும் பிற சமூக மக்களோடு எவ்வாறு ஒருங்கிணைந்து பழக வேண்டும் எனவும் கட்சியினை உற்சாகத்துடன் எவ்வாறு வைத்து கொள்ள வேண்டும். எனவும் எடுத்துரைத்தார் . பொது செயலாளரின் உரை அரங்கில் குழுமியிருந்த மாற்று மத நண்பர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது . இறுதியாக பூவை நகர பொருளாளர் அஜ்மல் கான் நன்றியுரை கூறினார். தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)