திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுக் குழு…

image

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 12-08-2016 பூவிருந்தவல்லியில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்  ஆணையூர் அக்பர் உசேன் தலைமை வகித்தார் .பூவிருந்தவல்லி நகர செயலாளர் பூவை. யாசர் அராபத்  வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணை செயலாளர்  பக்ருதீன்,தலைமை கழக பேச்சாளர் பூவை அப்துல் காதர் மஜக பணிகள் குறித்தும் இந்த சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அடுத்து பேசிய மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கையும் புதிய கல்வி கொள்கையின் பாதகங்களை விளக்கினார். 

நிறைவுரையாற்றிய பொதுச் செயலாளர் #தமிமுன்_அன்சாரி அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி கடந்து வந்த பாதை குறித்து விரிவாக விளக்கினார். மேலும் பிற சமூக மக்களோடு எவ்வாறு  ஒருங்கிணைந்து பழக வேண்டும் எனவும் கட்சியினை   உற்சாகத்துடன் எவ்வாறு வைத்து கொள்ள வேண்டும். எனவும்  எடுத்துரைத்தார் . பொது செயலாளரின் உரை அரங்கில் குழுமியிருந்த மாற்று மத நண்பர்கள் மத்தியில்  உற்சாகத்தை ஏற்படுத்தியது .

இறுதியாக பூவை நகர பொருளாளர் அஜ்மல் கான் நன்றியுரை கூறினார்.

தகவல்;

மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)