நாகை விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் MLA!

image

image

ஆக்.13., நாகையில் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து sos என்ற தொண்டு நிறுவனம் அக்குழந்தைகளை சிறப்பாக வளர்த்து வருகிறது. நாடெங்கிலும் கிளைகளை கொண்ட அந்நிறுவனத்தின் சார்பில் இன்று நாகப்பட்டினம்  EGS பிள்ளை பொறியியல் கல்லுரி வளாகத்தில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெலுங்கான உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து இந்தாண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகள் பங்கேற்றனர்.

அந்நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று தொடங்கி வைத்து ‘sos childrens village of india’ நிறுவனத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மஜக நிர்வாகிகள் சதகத்துல்லா, முபாரக், ஹமீத் ஜெகபர், சம்பத், கண்ணுவாப்பா, அஜீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்; மஜக ஊடகப்பிரிவு
நாகை தெற்கு