செப்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்டம் சார்பில் கேரளா இடுக்கி மாவட்டத்தில் தினசரி கூலி வேலைக்கு சென்றுவந்த தேனி மாவட்ட ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரியும், கட்டுமான தொழிலாளர்கள், பால் வியாபாரிகள் பணிக்கு செல்ல அனுமதி வழங்கக் கோரியும், தமிழக கூலி தொழிலாளர் களின் வறுமையை போக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரியும், ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக, கேரள, எல்லையான கம்பம் மெட்டு பகுதியில் முற்றுகை போராட்டம் மாவட்டச் செயலாளர் ரியாஸ், அவர்கள் தலைமையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது தேனி மாவட்டம் கம்பம் போடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்ட வேலைகளுக்கு தினசரி சுமார் மூன்றாயிரம் பேர் ஜீப், மற்றும் பேருந்துகளில், தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தார்கள், ஆனால் கொரோனா தாக்கத்தால் தற்போது ஏழு மாதங்களாக அவர்களுக்கு வேலை இல்லை அந்த குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! பச்சை முண்டாசு கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் கறுப்புச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 30.09.2020 அன்று மாலை 4.00மணிக்கு நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் அருகில். பச்சை முண்டாசு கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA வாருங்கள். உழவர் உரிமை காக்க அணிதிரள்வோம்! இவண், #மனிதநேய_ஜனநாயக_கட்சி #நாகை_சட்டமன்ற_தொகுதி
விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி!! கூடலூரில் கொட்டும் மழையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!
கூடலூர்:செப்.27., மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியாவின் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர், அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர் ஜோஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சம்ரின், நகர செயலாளர் ஜீவன், நகர பொருளாளர் அப்துல் மஜீத் அமீனி, நகர துணை செயலாளர்கள் லத்தீப், விஜயன், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள், பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கூடலூர்_நகரம் #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 27.09.2020
விவசாய சட்டங்களை திரும்ப பெறு!கறுப்பு முகவசத்துடன் வயலில் இறங்கி மஜக ஆர்ப்பாட்டம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
செப் 27, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற கோரி மஜக சார்பில் அக்டோபர் 2 வரை ஒரு வார கால போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் - தோப்புத்துறையில் கறுப்பு முகவசங்களுடன் வயலில் இறங்கி மஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் மன்சூர், மாவட்ட துணைச் செயலாளர் சேக் அஹமத் துல்லாஹ், நகர செயலாளர் சரிஃப், நகர துணைச் செயலாளர் முருனானந்தம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் முபீன், உள்ளிட்ட மஜக ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம்
குடந்தையில் நீட் தேர்வை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி மஜக ஆர்ப்பாட்டம்!
செப்.19, குடந்தையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நீட் தேர்வை கண்டித்தும், திரும்ப பெற மத்திய பாஜக அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட து.செயலாளர் இப்ராஹீம் ஷா தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநிலச் செயலாளர் ராசுதீன், மாநில கொள்கை விளக்க அணியின் து. செயலாளர் காதர்பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, மு. மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், அமீரக செயற்குழு உறுப்பினர் யூசுப் மற்றும் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர மஜக வினர் திரளாக பங்கேற்றனர். இறுதியில், IKP நிர்வாகி அல்லாபாக்ஸ் நன்றி கூறினார். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.