நெல்லை.அக்.02 கடந்த 50 வருடங்களாக மக்கள் பயண்படுத்திய வந்த பேட்டை ஆசிரியர்காலனி, திருவள்ளுவர் நகர், அண்ணாநகர், திருமங்கை நகர் வழியாக செல்லும் செந்தமிழ் நகர், திருப்பணி கரிசல்குளம் செல்லும் பிரதான சாலையை அரசு ஐடிஐ நிறுவனம் அடைத்தை தொடர்ந்து. மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் பேட்டை நகரத்தின் ஒருங்கிணைப்பில் பொதுமக்களை ஒன்றுதிரட்டி இன்று (02-10-2020) அடையாள போராட்டம் நடத்தினர். போராட்ட இடத்திற்கு பேட்டை காவல் ஆய்வாளர் வேல்கனி அவர்கள் மஜகவினரிடம் பேச்சுவார்தை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வை ஏற்படுத்தி தருவதாக கூறியதன் அடிப்படையில் மக்கள் கலைந்துசென்றனர். ஓரிரு நாட்களில் தீர்வு எட்டப்பட்டு மூடிய சாலைகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை என்றால் மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் மஜக-வின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், பொருளாளர் பேட்டை மூஸா, பேட்டை நகர செயலாளர் இரா.முத்துகுமார், பொருளாளர் அசன்கனி, பேட்டை நகர அணி நிர்வாகிகள் ஹபிபுல்லாஹ், முருகேசன் மற்றும் பேட்டை மக்கள் நல அமைப்பு ராஜகனி, மதிமுக நெல்லை மாவட்ட துணை செயளாலர் செல்லமுத்து, ஜமாத்தை சார்ந்த சதக் மற்றும் பொதுமக்கள் என
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலை செங்கத்தில் மஜகவினர் பச்சை முண்டாசு கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!
செங்கம்.அக்டோபர்.02., விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மாவட்டச் செயலாளர் காஜாஷரிப் தலைமையில் திரளானோர் பச்சை முண்டாசு கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாளர், மாவட்ட துணை செயலாளர்கள், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவண்ணாமலை_மாவட்டம் 02.10.2020
விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மதுரையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரையாற்றினார்!!
செப்.02., விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை மாவட்டம் தமுக்கம் தந்தி அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்புச்சட்டங்கள் குறித்தும் அது விவசாயிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து உரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஒத்தக்கடை பாருக், புதூர் கனி, மாவட்ட துணை செயலாளர்கள் கோடை அப்துல் மஜீத், பென்ஸ் மோகன், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் , நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_மாவட்டம் 01.10.2020
விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!! மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் கண்டன உரையாற்றினார்!!
செப்.01., விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்புச்சட்டங்கள் குறித்தும் அது விவசாயிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து உரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் SMR.பாரி, மாநில செயற்குழு உறுப்பினர் காஜா மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் AKT.காஜா, SN.சேட், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் , நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_வடக்கு_மாவட்டம் 01.10.2020
லால்பேட்டையில் மாட்டு வண்டியில் ஏறி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!
செப்.30, வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லால்பேட்டை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் H.ஜாபர் சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மஜகவினர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் மசோதாவை எதிர்த்தும் மாட்டுவண்டியில் ஏறி முழக்கங்களை எழுப்பினர். மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி.இப்ராஹிம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், துணை செயலாளர் s.கியாசுதீன், இளைஞரணி செயலாளர் நைனா முஹம்மது, MJVS மாவட்ட செயலாளரும், எள்ளேரி ஊராட்சி மன்ற து. தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், மாணவர் இந்தியா துணை செயலாளர் பைசல், நகர பொருளாளர் யூனுஸ், துணை செயலாளர் பிரபு உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.