விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!! மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் கண்டன உரையாற்றினார்!!


செப்.01.,

விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்புச்சட்டங்கள் குறித்தும் அது விவசாயிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து உரையாற்றினார்.

இதில் மாவட்ட பொருளாளர் SMR.பாரி, மாநில செயற்குழு உறுப்பினர் காஜா மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் AKT.காஜா, SN.சேட், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் , நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_வடக்கு_மாவட்டம்
01.10.2020