அக்.06, தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மஜக சார்பில் வேளாண் கருப்புச் சட்டங்களை திரும்ப பெற கோரியும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்து உரிய நீதி வேண்டியும், உ.பியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை சேக் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இப்போராட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்களும், மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் சலாம் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் திமுக செயலர் ஹபீப் முகம்மது, தவாக மாவட்ட செயலர் பஷீர் அஹமது, MKPஅமீரக பொறுப்பாளர் அஷ்ரப், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மல்லிப்பட்டினம் நிர்வாகிகள் ஹுமாயூன் கபீர், முஹம்மது ஜுனைது, சேக்காதி, தப்தஹீர், அதிரை நிர்வாகிகள் அப்துல் சமது, அஷ்ரப், புதுப்பட்டினம் நகர செயலர் ஜெகபர் சாதிக், சேதுபாவா சத்திரம் நகர செயலர் சலிம் மற்றும் ஆலிம், நூருல்அமீன் உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம். 05/10/2020
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
சேதுபாவாசத்திரத்தில் மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு!
அக்.04, தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவா சத்திரத்தில் வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற கோரியும், பாபர் மசூதியை இடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்தும், உ.பி யில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வையும் கண்டித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை கோரி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை ஸ்மார்ட் சாகுல் ஹமீது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் சலாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை சேக், சமூக ஆர்வலர் அதிரை சாகுல் ஹமீது கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் சேதுபாவாசத்திரம் கிளை செயலாளர் சலிம், பொருளாளர் யூசுப், துணைச்செயலாளர்கள் ராவுத்தர், சஹாபுதீன், செய்யது இப்றாஹிம், ஆலிம்.நூரூல் அமீன், மல்லிப்பட்டினம் நகர செயலர் ஹுமாயூன் கபீர், அதிரை நகர செயலர் அப்துல் சமது, நிர்வாகிகள் மர்ஜூக், ஹக், நபில் உள்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
விவசாய கறுப்புச்சட்டங்களை கண்டித்து இராஜபாளையத்தில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!
அக்.04., மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்ட ராஜ பாளையத்தில் மாவட்ட செயலாளர் கண்மனி காதர், அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விருது நகர் விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, மஜக தலைமை கழக பேச்சாளர் வாவை இனாயத்துல்லாஹ், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் விருதுநகர் மாவட்ட மாணவர் இந்தியா மாவட்ட பொறுப்பாளர் எம்.எம் இப்ராஹீம், ஸ்ரீவில்லி புத்தூர் நகர செயலாளர் ஷாஜ ஹான்,ராஜபாளையம் விவசாய அணி பொறுப்பாளர் பெரியசாமி, சிவகாசி நகர செயலாளர் சந்தோஷ்குமார், ராஜபாளையம் நகர துணைச் செயலாளர் பஷீர், அப்துல் வகாப், ராஜபாளையம் கிளைச் செயலாளர் சம்சுதீன், அவர்களும் ராஜபாளைய ஒன்றிய நிர்வாகிகள் முரம்பு,முத்து வேல், மற்றும் திரளோனார் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 04.10.2020
கன்னியாகுமரியில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!
நாகர்கோவில் அக்டோபர். 04, மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, நீட், போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேஸ்வரன் தாஸ், அவர்கள் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி, ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ், ஃபையாஸ் அஹமத், வழக்கறிஞர் தோழர். ஐயப்பன், ஆகியோர் இச்சட்டங்களின் பாதிப்புகளை குறித்து கண்டன உரையாற்றினர். இறுதியில் மாநகரச் செயலாளர் அமீர்கான், நன்றி உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பெண்கள், உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 03.10.2020
கடலூர் நெல்லிக்குப்பத்தில் விவசாயிகளுக்கு ஆதரவளித்து மஜகவினர் ஆர்ப்பாட்டம்!
அக்.03, வேளாண் கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைப்பெற்றது. மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் பண்ருட்டி யாசின், அணி நிர்வாகிகள் சதாம், ஹலில் ரஹ்மான், நெய்வேலி பாபர், நகர செயலாளர் அப்துல் அஜீஸ், பொருளாளர் ரியாசத் அலி, துணை செயலாளர்கள் சாதிக், பகுதாத், பாஸித், நகர அணி நிர்வாகிகள் முஸ்டாக், சதாம் உள்பட மஜகவினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_வடக்கு_மாவட்டம்.