டிச.21, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் மூன்று சட்டங்களுக்கு எதிராக கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேட்டுப்பாளையத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் VMT ஜாபர் தலைமை தாங்கினார். மஜக கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் கோவை.நாசர் இச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை விளக்கி இச்சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசிற்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார். இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் நெளபல், PFI மாவட்ட பொது செயலாளர் காஜா, SDTU மாவட்ட தலைவர் முஹம்மது அலி, சமூக ஆர்வலர்கள் முஹம்மது அனிபா, ஹக்கீம் சேட் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் மஜக மாவட்ட பொருளாளர் M. காஜா மைதீன், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் M.ஆரிஃப் அப்பாஸ், A.ஷேக் மைதீன், MJTS மாவட்ட தலைவர் முஹம்மது அப்சல், பொருளாளர் காஜா, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் மன்சூர், IKP மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட நிர்வாகிகள் SMR பாரி, உமர் பாரூக்,
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..! இணை பொதுச்செயலாளர் JS ரிபாய் பங்கேற்பு..!
நெல்லை.டிச.21., மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்டம் சார்பாக மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, தலைமை செயற்குழு உறுப்பினர் காஞ்சி சிந்தாமதார், மாவட்ட துணை செயலாளர்கள் காயல் A1 மைதீன், வீ.கே.புரம் செய்யதலி, விவசாய அணி மாவட்ட செயலாளர் நெல்லை ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். மேலும் மஜக மாநில துணை செயலாளர் A.R.சாகுல்ஹமீது, தமிழக வாழ்வுரிமை கட்சி அய்யாவழி பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கரிசல் சுரேஷ், வழக்கறிஞர் அஹமது சாகிப், INLP M.A.M உசேன் அல்தாபி, TMJK அப்துல் ஜப்பார், AIMIM சதாம் உசேன், தமிழ்புலிகள் கட்சி தமிழ்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து அப்பாஸ்,அப்துல்லா, கலீல், அன்சர்பாபு, A.R.காஜா
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் மஜக வினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரை நிகழ்த்தினார்!
மதுரை:டிச.20., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மதுரை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் அவர்கள் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் இப்ராஹீம் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தக்கடை பாருக், ஆகியோர் இச் சட்டங்களின் பாதிப்புகள் குறித்து, கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கனி, மாவட்ட துணைச் செயலாளர்கள் கோடை அப்துல் மஜீத், சதாம் உசேன், பென்ஸ் மோகன், ஒத்தக்கடை சுலைமான், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர் அஹமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜலால், சீனி அகமது, நகர செயலாளர் செந்தில், பொருளாளர் இக்பால், ஒத்தக்கடை ஒன்றிய செயலாளர் சிக்கந்தர், மற்றும் நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_மாவட்டம் 19.12.2020
புதுக்கோட்டையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
டிச.18, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்கோட்டையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் துரை முஹம்மது பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். இப்போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்பட திரளான மஜகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்.
தூத்துக்குடியில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்!!
அக்.11., தூத்துக்குடி மாவட்டம் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட மனீஷா, என்ற தலித் பெண்ணின் மரண த்திற்க்கு நீதி வேண்டியும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்ற வாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன், அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் அனைத்து கட்சி, இயக்க, பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றினர். மஜக சார்பில் மாநகர செயலாளர் ஹச்சி முகம்மது, நாகை திட்டச்சேரி நூருல் அமீன், நகர நிர்வாகிகள் செல்வம், ஜெஸ்வின், ஷாருக்கான், மற்றும் அழகுராஜ், மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_மாவட்டம் 11.10.2020