டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் மஜக வினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரை நிகழ்த்தினார்!


மதுரை:டிச.20.,

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மதுரை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் அவர்கள் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் இப்ராஹீம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தக்கடை பாருக், ஆகியோர் இச் சட்டங்களின் பாதிப்புகள் குறித்து, கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கனி, மாவட்ட துணைச் செயலாளர்கள் கோடை அப்துல் மஜீத், சதாம் உசேன், பென்ஸ் மோகன், ஒத்தக்கடை சுலைமான், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர் அஹமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜலால், சீனி அகமது, நகர செயலாளர் செந்தில், பொருளாளர் இக்பால், ஒத்தக்கடை ஒன்றிய செயலாளர் சிக்கந்தர், மற்றும் நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மதுரை_மாவட்டம்
19.12.2020