காயல்பட்டினத்தில்,மஜக 7ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்று நிகழ்ச்சி..!5இடங்களில் கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.,

தூத்துக்குடி_மார்ச்:06.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு பல்வேறு மாவட்டம் எங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு நிகழ்வாக தூத்துக்குடி புறநகர் மாவட்டம் காயல்பட்டினம் நகர மஜக சார்பில் ஐந்து இடங்களில் கட்சியின் கொடிகளை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் இப்னுமாஜா அவர்கள் தலைமை தாங்கினார்
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப் பொருளாளர் ராசுகுட்டி துணைச் செயலாளர் மீராசாஹிப் நகர பொருளாளர் மீரான் கட்சியின் மூத்த உறுப்பினர் சேக் அப்துல் காதர் ஆகியோர் பங்கேற்று ஐந்து இடங்களில் கட்சியின் கொடிஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நகர நிர்வாகிகள் இர்ஷாத், சம்சுகனி, ஜிபுரி உள்ளிட்ட மஜக வினர் திரளாக கலந்து கொண்டனர் .

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-IT-WING
தூத்துக்குடி புறநகர் மாவட்டம்
06.03.2022