விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..! இணை பொதுச்செயலாளர் JS ரிபாய் பங்கேற்பு..!


நெல்லை.டிச.21.,

மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்டம் சார்பாக மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, தலைமை செயற்குழு உறுப்பினர் காஞ்சி சிந்தாமதார், மாவட்ட துணை செயலாளர்கள் காயல் A1 மைதீன், வீ.கே.புரம் செய்யதலி, விவசாய அணி மாவட்ட செயலாளர் நெல்லை ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

மேலும் மஜக மாநில துணை செயலாளர் A.R.சாகுல்ஹமீது, தமிழக வாழ்வுரிமை கட்சி அய்யாவழி பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கரிசல் சுரேஷ், வழக்கறிஞர் அஹமது சாகிப், INLP M.A.M உசேன் அல்தாபி, TMJK அப்துல் ஜப்பார், AIMIM சதாம் உசேன், தமிழ்புலிகள் கட்சி தமிழ்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தொடர்ந்து அப்பாஸ்,அப்துல்லா, கலீல், அன்சர்பாபு, A.R.காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன கோசம் எழுப்பினர், இறுதியாக தலைமை செயற்குழு உறுப்பினர் முகம்மது அலி இக்பால் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கனக்கான நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
20-12-2020