ஜன.01, டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 36 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் ஒன்று கூடிய மஜக வினர் தங்கள் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு கடைவீதியில் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில், பொதக்குடி, அத்திக்கடை, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகப் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 31.12.2020
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்!
ஈரோடு :டிச.31., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஈரோடு மாநகா் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளா் ஷபிக் அலி, அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளா் முகமது அலி, மாவட்ட துணை செயலாளா்கள் ஆடிட்டா் ரியாஸ், ஆட்டோ பாபு, MJTS மாவட்ட தலைவா் சபா் அலி, MJVS மாவட்ட செயலாளா் சிராஜ், மாணவா் இந்தியா மாவட்ட தலைவா் யாசா், துணை தலைவா் பயாஸ்தின், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், மேற்கு மாவட்ட பொருளாளர் பவானி சாதிக் பாஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, அவர்கள் துவக்க உரையாற்றினார். இதில் மாநில பொருளாளா் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் பங்கேற்று மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவளிக்கும் கொடிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன உரையாற்றினார். மேலும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினா் கணேச மூா்த்தி, மஜக துணை பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக், திமுக மாநகர செயலாளா் மு.சுப்பிரமணியம், ஆகியோரும்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரை நிகழ்த்தினார்!
திண்டுக்கல் :டிச.30., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திண்டுக்கல் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் சாந்து முகம்மது, அவர்கள் தலைமை வகித்தார். இதில் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, திருச்சி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மைதீன், ஆகியோர் இச் சட்டங்களின் பாதிப்புகள் குறித்து, கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திண்டுக்கல்_மாவட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசியில்மஜகவினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் கண்டன உரையாற்றினார்!
தென்காசி.டிச.27., மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மஜக மாவட்ட செயலாளர் M.பீர் மைதீன், தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், வாவை A.இனையதுல்லா, பண்பொழி R.அபுதாஹிர், விவசாய அணி மாவட்ட செயலாளர் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மஜக மாநில துணை பொதுச் செயலாளர் கோவை A.K. சுல்தான் அமீர், அவர்கள் பங்கேற்று வேளாண் சட்டங்களின் பாதிப்பு குறித்தும் விவசாயிகளை வேளாண் சட்டங்கள் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் கண்டன உரையாற்றினார். மேலும் மஜக மாநில துணை செயலாளர் A.R.சாகுல்ஹமீது, இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநிலச் செயலாளர் லேனா இஷாக், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு நெல்லை மண்டல செயலாளர் செல்லத்துரை, திராவிடர் தமிழர் கட்சி மாநில பொதுச்
குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜகவினர் ஆர்ப்பாட்டம்!
வேலூர்.டிச.25., டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் S.அனிஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநிலச் துணைச்செயலாளர்கள் திருமங்கலம் ஷமிம் மற்றும் SG.அப்சர் சையத் ஆகியோர் கலந்து கொண்டு இச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை விளக்கி, இச்சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசிற்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிய, SDPI, INL, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியதுடன், மஜகவினருடன் இணைந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.. இதில் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸின், மாவட்ட பொருளாளர் முனவ்வர் ஷரிப் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், நிஜாமுத்தீன், அமீன், ஆரிப், மாவட்ட