டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி கண்டன உரை நிகழ்த்தினார்!


திண்டுக்கல் :டிச.30.,

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திண்டுக்கல் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் சாந்து முகம்மது, அவர்கள் தலைமை வகித்தார்.

இதில் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, திருச்சி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மைதீன், ஆகியோர் இச் சட்டங்களின் பாதிப்புகள் குறித்து, கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திண்டுக்கல்_மாவட்டம்