விவசாயம் காக்க உறுதிமொழியேற்பு.. தஞ்சை மஜகவினர் பங்கேற்பு!


டிச.30,

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தலையொட்டி தமிழகம் எங்கும் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தனர்.

தஞ்சையில் விவசாய அமைப்புகளின் சார்பில் இயற்கை விவசாயம் காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் அகமது கபீர், திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) ஹபீப் ரஹ்மான், தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லா, துணை செயலாளர் சாகுல் ஹமீத், தஞ்சை வார்டு செயலாளர் முஹம்மது காமில் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பெ.மணியரசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.