குடியாத்தத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜகவினர் ஆர்ப்பாட்டம்!


வேலூர்.டிச.25.,

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் S.அனிஸ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநிலச் துணைச்செயலாளர்கள் திருமங்கலம் ஷமிம் மற்றும் SG.அப்சர் சையத் ஆகியோர் கலந்து கொண்டு இச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை விளக்கி, இச்சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசிற்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிய, SDPI, INL, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியதுடன், மஜகவினருடன் இணைந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்..

இதில் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸின், மாவட்ட பொருளாளர் முனவ்வர் ஷரிப் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், நிஜாமுத்தீன், அமீன், ஆரிப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் மஸ்தான், வலீ பாஷா, சலீம், இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கவுஸ், கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும், என திரளானோர் கலந்துக் கொண்டனர்.

இறுதியாக ஒன்றிய செயலாளர் T.M.சலீம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்__மாவட்டம்.
24/12/2020