(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) வட இந்தியாவில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. பாமர வட இந்திய இந்து சகோதரர்களை தீவிர இந்துத்துவ வெறியர்களாக்கும் முயற்சியில் காவி மதவெறியர்கள் வெற்றி பெற்று வருகிறார்களோ என அஞ்ச வேண்டியுள்ளது. கடந்த 1 வாரமாகவே மனசு சரியில்லை. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜுனைத் என்ற பதினாறு வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை கண்ணீரை சிந்த வைத்து விட்டது. அவன் இளம் வயதில் தந்தையை இழந்து, கூலி வேலை செய்யும் விதவை தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன். நோன்பு வைத்துக் கொண்டு, பெருநாளைக்கு புத்தாடை வாங்க, தன் ஏழைத்தாய் சேகரித்த பணத்திலிருந்து 1500 ரூபாயை வாங்கிக் கொண்டு ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டான். தன் அருமை புதல்வன் தனக்கும் சேர்த்து புத்தாடை வாங்கி வருவான், நோன்பை துறப்பதற்கு வீட்டிற்கு வந்து விடுவான் என காத்திருந்த அந்த ஏழை விதவைத் தாய் ஏமாந்து போனாள். அந்தோ...பரிதாபம்! அந்த நோன்பாளியை, ரயிலில் வந்த 'பசு காவலர்கள்' என்ற போர்வையில் திரியும் மதவெறிக் கும்பல், காரணங்களே இன்றி ஜுனைத்தை 'மாட்டுக்கறிக்கு ஆதரவாளன்' என்று
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
சென்னை – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலை இரயில் தடம் ! விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும்…
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிய ரயில்பாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருப்பதும் , இதற்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு நல்கும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருப்பதும் வரவேற்கதக்கது. சென்னை - மகாபலிபுரம் - பாண்டிச்சேரி - காரைக்கால் - நாகப்பட்டினம் - வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி - அதிராம்பட்டினம் - தொண்டி - இராமநாதபுரம் - கீழக்கரை - தூத்துக்குடி - காயல்பட்டினம் - கன்னியாகுமரி என வழித்தடம் அமைக்கப்பட வேண்டும். இதன் வழித்தடம் கடற்கரையிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். என்பதில் மத்திய - மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் . அப்போது தான் கடற்கரைப்பகுதி மக்களின் வணிகம் , போக்குவரத்து உள்ளிட்ட எதிர்பார்ப்புகளும் அதன் நோக்கமும் நிறைவேறும் . இதை தாமதிக்காமல் , ஐந்தாண்டு கால திட்டமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டும் , என கேட்டுக் கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக
தமிமுன் அன்சாரி MLA உடன் ஏனங்குடி கேதாரிமங்களம் ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு…!
நாகை. ஜூன்.25., நேற்று கேதாரிமங்களம் ஜமாத்திற்க்கு வருகைப்புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களை ஜமாத் நிர்வாகிகள் சந்தித்தனர். பிறகு புத்தாகரம் ஊராட்சிக்குட்ப்பட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனை மின் விளக்கு, குப்பைதொட்டி, மையவாடி சுற்றுச்சுவர் போன்ற பிரச்சினைகளை கோரிக்கையை வைக்கப்பட்டது. உடனடியாக சம்மதப்பட்ட அதிகாரிகளை தொடர்புக்கொண்டு பணிகள் நடைபெற பேசினார். உடன் அதிமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் ஆர்.இராதாகிருட்டிணன், மஜக மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் வடகரை பரக்கதலி, மாவட்ட துனை செயலாளர் யூசுப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப்தீன், ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர்ரஹ்மான் மற்றும் குவைத் மண்டல துணை செயலாளர் முஹம்மது பாசில் ஆகியோர் உடன் இருந்தனர் தகவல்:- தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. நாகை தெற்கு மாவட்டம் #MJK_IT_WING 24.06.2017
முகமது ரிஃபாத் ஷாரூக்…! தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தம்பி !
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) விலை குறைந்த கையடக்க செயற்கை கோளை தயாரித்து உலக அளவில் இந்தியாவுக்கும் , தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் பள்ளப்பட்டியை சேர்ந்த முகம்மது ரிஃபாத் ஷாரூக் என்ற மாணவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஏழைக் குடும்பத்தில் பிறந்து , இளம் வயதில் தந்தையை இழந்து , +2 தேர்வில் வெறும் 750 மதிப்பெண்களே எடுத்துள்ள நிலையில் , இம்மாணவர் நிகழ்த்திய இச்சாதனை பெரும் பாராட்டுக்குரியது . அறிவுக்கும் , மதிப்பெண்களுக்கும் தொடர்பு இல்லை என்பதும் , அறிவு என்பது வர்க்கம் சார்ந்து வருவதில்லை என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது . அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கழகம் உலக அளவில் 8 ஆயிரம் மாணவர்களை சோதித்து இவரை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது உலக தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இச்செய்தியை சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் O.S.மணியன் அவர்களுக்கும் , இம்மாணவனுக்கு 10 லட்சம் ரூபாயை ஊக்கப்பரிசாக அறிவித்த முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் பாராட்டுக்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் . இவண்
பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு கொடுத்த மஜக பொதுச் செயலாளர்…!
சென்னை.ஜூன்.24., நேற்று பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய நீண்டநாள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும்படி சட்டசபை வளாகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்தனர். அனைவரையும் பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.செங்கோட்டையனிடம் தமிமுன் அன்சாரி அவர்கள் அழைத்து சென்றார்கள். சுமார் 15 நிமிடத்திற்கு சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் பிரச்சனைகளை முழுமையாக விளக்கினார்கள். அதை அனைத்தையும் கேட்ட அமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து முழுமையாக கண்டறிய ஒரு கமிட்டி அமைப்பதாகவும், அந்த கமிட்டியின் கோரிக்கைகளை பரிசீலித்து செயல்படுத்துவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். தங்களின் நீண்டகால பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதிற்க்காக பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு தெரிவித்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சட்டமன்ற வளாகம். #MJK_IT_WING 23.06.2017