திருச்சி மாநகரில் காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து உக்கிரத்தோடு மஜக வின் சார்பில் கடந்த 24.07.2016 அன்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளர் #மைதீன்_உலவி தலைமையில், மாநில செயலாளர் ராசுதீன் முன்னிலையில், மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்தலில் மாலை 4 மணியளவில் மஜவினரும்,பொது மக்களும் திரண்டனர். மஜகவின் அழைப்பினை ஏற்று திரண்ட மக்கள் திருச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். #காஷ்மீர்_மக்களின்_போராட்டம்__தேசிய_இனத்தின்_போராட்டம் #காஷ்மீர்_பெண்களை_கற்ப்பழிப்பதற்க்கு_பெயர்_தேச_பக்தியா? #காஷ்மீர்_குழந்தைகளை தாக்குவதற்கு_அரச_படைகளுக்கு_அதிகாரமா? மத்திய அரசே...காஷ்மீரில் ராணுவத்தில் அத்துமீறல்களை தடுத்து நிறுத்து போன்ற பதாகைகளுடன்,நெருப்பை சுடும் முழக்கங்களும்,வேட்டையாட புறப்புடும் புலிகளின் உறுமலுடன் மஜகவினர் திருச்சி ரயில் நிலையத்தை சுற்றி வளைத்தனர். மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய படியே காவல்துறை வேண்டுகோளை ஏற்று அனைவரும் கைதாகினர். ஈழத் தமிழர்களும்,காஷ்மீரிகளும்,நாகலாந்து மக்களும்,மணிப்பூர் மக்களும் மனிதநேயத்துடன் காப்பாற்ற படவேண்டும். என்பதே மஜக வின் நோக்கம்.#அதற்காக_எப்போதும்_எழும்_நமது_முழக்கம் தகவல்; மஜக ஊடகப் பிரிவு (திருச்சி)
Author: admin
துடிக்கும் குழந்தைகளின் இரத்தத்தில் தேச பக்தி பேசாதே! போர் முழக்கத்தோடு நெல்லை ரயில் நிலையத்தில் மஜகவினர் ஆர்ப்பரிப்பு
கடந்த 24.07.2016 அன்று காலை 11.30 மணியளவில் திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ராணுவத்தின் அத்துமீறல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் ரயில் மறியல் போராட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. நெல்லை ஜங்ஷன் பகுதியில் கொள்கை பரப்புச் செயலாளர் #மன்னை_செல்லசாமி தலைமையில், மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் #கோவை_நாசர் முன்னிலையில்,மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்துதலில் அலை அலையாய் மஜகவினர் திரண்டனர். #உரிமை_கேட்கும்_உறவுகளை_துப்பாக்கி_முனையில்__அடக்காதே! மத்திய அரசே...காஷ்மீருக்கு அமைதி குழுவை அனுப்பு போன்ற பதாகைகளை ஏந்தியும்,மஜக கொடிகளுடன் திரண்ட மக்கள் ரயில் நிலையம் முன்பு குழுமினர். #துடிக்கும்_குழந்தைகளின்_இரத்தத்தில்_தேச_பக்தி_பேசாதே! போன்ற அதிரடி முழக்கங்களை எழுப்பி பொது மக்களின் கவனத்தை ஈர்த்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு,ஏராளமான வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர். காஷ்மீரிகளின் கண்ணீரை குமரியின் எல்லையிலிருந்து முழக்கங்களை எழுப்பி துடைக்க முயலும் மனிதநேய போராட்டம் தொடரும்.... தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (நெல்லை)
மஜக ரயில் மறியலில் உணர்ச்சி மிகு நிகழ்வுகள்..
* இன்று சென்னையில் மஜக நடத்திய ரயில் மறியலில் மஜகவின் அழைப்பை ஏற்று பல்வேறு சமூக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தது, காஷ்மீரிகளுக்கான ஆதரவு களத்தை கூர்தீட்டியது. * 4.30 மணிக்கு 500 பேர் கூடியதும் காவல்துறை நெருக்கடி கொடுத்து, 5 மணிக்குத்தான் போராட்டத்தை தொடங்குவோம் என கூறியதும் காவல்துறை ஏற்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கியதும் கூட்டம் ஆர்ப்பரித்தது. வேன்களில் மக்கள் வரிசையாக திரளத் தொடங்கியதும் எழும்பூர் முழுக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டது. * போக்குவரத்து ஸ்தம்பித்ததும், வீதிகளில் மஜகவினர் கொடிகளுடன் ஆவேசம் பொங்க முழக்கங்களை எழுப்பி ரயில் நிலையத்தை நோக்கி ஒடினர். காவல்துறை 2 அடுக்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்து தைமிய்யா தலைமையில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து முன்னேறி, குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். * மாநில செயலாளர் சாதிக்பாஷா, துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, கைதுக்கு தயாராகினர். மாநில அணி நிர்வாகிகள் ஷமீம், பல்லாவரம் ஷபி மற்றும் சென்னை, காஞ்சி,திருவள்ளூர், மாவட்ட நிர்வாகிகள் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தினர். * தனியரசு MLA அவர்கள் பேட்டி முடிந்ததும், கூட்டம் அலை மோதியதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி
சென்னையில் தடையை உடைத்து மஜகவினர் ரயில் நிலையத்தில் நுழைந்தனர்…
இன்று மஜக சார்பில் காஷ்மீரில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களை கண்டித்து இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை எக்மோர் ரயில் நிலையம் அருகில் குழுமினர். பெரும் திரளானோர் கூடிய நிலையில், மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு MLA, SDPI சார்பில் அமீர் ஹம்சா, INTJ சார்பில் முனீர், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் சார்பில் தலைவர் அ.ச. உமர் பாரூக், இந்திய தேசிய லீக் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் நிஜாமுதீன், பேரா. அ. மார்க்ஸ், இயக்குனர் கெளதமன், மே 17 இயக்கம் சார்பில் பிரவீன் குமார், மறுமலர்ச்சி தமுமுக சார்பில் தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகை தந்திருந்தனர். முழக்கங்களை எழுப்பிய மக்கள் திடீர் ஆவேசம் அடைந்து, மாநில செயலாளர் சகோ. தைமிய்யா தலைமையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். காவல்துறையின் தடுப்புகளை உடைத்து மஜகவினர் ஆவேசத்துடன் நுழைந்தனர். மற்றவர்கள் தடுக்கப்பட்ட நிலையில், உள்ளே புகுந்த மஜகவினர் குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர். கூட்டம் தொடர்ந்து முன்னறியதும் அனைவரும் வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு, வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.
மாயாவதி மீதான விமர்சனம்! மஜக கடும் கண்டனம்…
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்றப் பிறகு,பாஜக தலைவர்களும்,காவி இயக்கங்களின் தலைவர்களும் முன்பை விட மோசமான கருத்துக்களை மனம்போன போக்கில் பேசி வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமை மிக்க தலைவராக விளங்கும் மாயாவதி அவர்களின் மீது வைக்கப்பட்ட தரம் தாழ்ந்த விமர்சனமாகும். குஜராத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி,இந்துத்துவ இயக்கங்களை சேர்ந்த வெறிப்பிடித்தவர்கள்,தலித்துக்களை மிக மோசமாக பொது இடத்தில் தாக்கி அவமானப்படுத்தியுள்ளனர்.மனிதநேயம் கொண்ட அனைவரையும் வேதனைக்குள்ளாக்கிய இக்கொடூர சம்பவத்தை தார்மீக உணர்வுடன் மாயாவதி கண்டித்துள்ளார். இதை சகித்து கொள்ள முடியாமல், உ.பி மாநில பா.ஜ.க துணை தலைவர் தயாசங்கர் சிங் அவர்கள் மாயாவதி மீது வைத்த நாகரீகமற்ற விமர்சனம்,பெண்களையும்,தலித்துகளையும், இழிவுப்படுத்தியதோடு, பொது வாழ்வில் செயல்படும் அனைவரையும் குலை நடுங்க செய்து இருக்கிறது. நாடெங்கிலும் எழுந்த கண்டனம் காரணமாக பா.ஜ.க தலைமை அவர்மீது நடவடிக்கைகள் எடுத்தாலும் அது போதாது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அது போல் குஜராத்தில் தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் அதே சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்விரு சம்பவங்களையும் கண்டித்த அனைத்து அரசியல் தலைவர்களும்,சமுதாயத்