துடிக்கும் குழந்தைகளின் இரத்தத்தில் தேச பக்தி பேசாதே! போர் முழக்கத்தோடு நெல்லை ரயில் நிலையத்தில் மஜகவினர் ஆர்ப்பரிப்பு

கடந்த 24.07.2016 அன்று காலை 11.30 மணியளவில் திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ராணுவத்தின் அத்துமீறல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் ரயில் மறியல் போராட்டம் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது.

நெல்லை ஜங்ஷன் பகுதியில் கொள்கை பரப்புச் செயலாளர் #மன்னை_செல்லசாமி தலைமையில், மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் #கோவை_நாசர் முன்னிலையில்,மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்துதலில் அலை அலையாய் மஜகவினர் திரண்டனர்.

#உரிமை_கேட்கும்_உறவுகளை_துப்பாக்கி_முனையில்__அடக்காதே!

மத்திய அரசே…காஷ்மீருக்கு அமைதி குழுவை அனுப்பு

போன்ற பதாகைகளை ஏந்தியும்,மஜக கொடிகளுடன் திரண்ட மக்கள் ரயில் நிலையம் முன்பு குழுமினர்.

#துடிக்கும்_குழந்தைகளின்_இரத்தத்தில்_தேச_பக்தி_பேசாதே!

போன்ற அதிரடி முழக்கங்களை எழுப்பி பொது மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு,ஏராளமான வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.

காஷ்மீரிகளின் கண்ணீரை குமரியின் எல்லையிலிருந்து முழக்கங்களை எழுப்பி துடைக்க முயலும் மனிதநேய போராட்டம் தொடரும்….

தகவல்;

மஜக_ஊடகப் பிரிவு (நெல்லை)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.