மார்ச் 12, கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப், APM சலீம் மற்றும் மங்கலம்பேட்டை நகர நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம். 11/03/2020
Author: admin
பல் தேசிய இனங்களை துண்டாட துடிக்கும் பாசிச பாஜக அரசு! நாமக்கல் காத்திருப்பு போராட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமத் உரை!
நாமக்கல்:மார்ச்.12., குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் நாமக்கல் பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அஹமது, அவர்கள் உரையாற்றினார். அவர் பேசியதாவது குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலமாக இந்தியாவில் வாழும் பல் தேசிய இனத்தை, சிறுபான்மையினரை ஆதிவாசிகளை துண்டாட துடிக்கின்றது மத்தியில் ஆளும் பாஜக அரசு சங்பரிவாரங்களை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையும், கலவரத்தையும் தூண்டுகின்ற முயற்சியில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டிய அவர், காவல் துறையின் மெத்தனப் போக்கு கலவரகாரர்களுக்கு ஊக்கமளிப்பதாக குற்றம் சாட்டினார். போராட்டத்தில் திரளான பெண்களும், ஆண்களும், பங்கேற்றனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஈரோடு பாபு ஷாகின்ஷா, நாமக்கல் மாவட்ட செயலாளர் சையத் கபீர், மாவட்ட துணை செயலாளர் மன்சூர் அலி, MJTS செயலாளர் ஜான் பாஷா, மாவட்ட பொருளாளர் மகபூப் பாஷா,சகன் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாமக்கல்_மாவட்டம் 11.03.2020
இன்று MGR இருந்திருந்தால் அவரது குடியுரிமையை பறித்திருப்பார்கள்..! மயிலாப்பூரில்முதமி முன் அன்சாரி MLA பேச்சு..!
சென்னை.மார்ச்.12., இன்று சென்னை மயிலாப்பூரில் நடந்த குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்ட களத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசினார். அப்போது பேசியதாவது.. மத்திய பாஜக அரசு நாட்டின் அன்றாட பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் மதவாத பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறது. குடியுரிமை கறுப்பு சட்டங்கள் அனைவருக்கும் எதிரானது என்பதை புரிந்த பிறகு போராட்ட களத்திற்கு பல்வேறு தரப்பு மக்களும் வரத் தொடங்கிவிட்டார்கள். CAA சட்டத்தில் ஈழத் தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை.? என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்புகிறோம். அதற்கு பதிலில்லை. முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் MGR அவர்கள் இன்று இருந்திருந்தால், அவரது குடியுரிமையை இச்சட்டத்தின் கீழ் பறித்திருப்பார்கள். அவர் நமது கிண்டியில் அல்ல... இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார் என்பது நமக்கு தெரியும். நல்லவேலையாக அப்போது இச்சட்டம் வரவில்லை. MGR அவர்கள் ஈழத் தமிழர்கள் மீது பரிவு காட்டினார். ஆனால் CAA சட்டத்தில் அவர்களை புறக்கணிக்கிறார்கள். முன்னாள் முதல்வர் சமூகநீதி காத்த வீராங்கனை டாக்டர் ஜெயலலிதா அம்மா அவர்கள், 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட இந்த குடியுரிமை சட்டங்களை
நாட்டை பிளவு படுத்தி விட்டார் பிரதமர் மோடி! கரூரில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது பேச்சு!
கரூரில் கருப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பாக குளித்தலையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது உரையாற்றினார். அவர் பேசியதாவது வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதாக தேர்தல் வாக்குறுதி தந்த நரேந்திரமோடி நாட்டை மதரீதியாக பிளவு படுத்தும் பிற்போக்கு பாதைக்கு அழைத்துச் செல்கின்றார் என்று பேசினார். இதில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கோவை செய்யது, திருச்சி மாவட்ட மமக தலைவர் உதுமான் அலி, உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள். இக் கூட்டத்தில் திரளான ஆண்களும், பெண்களும், கலந்து கொண்டார்கள். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின மாநில துணைச் செயலாளா் ஈரோடு பாபு ஷாகின்ஷா, கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில், நாமக்கல் மாவட்ட செயலாளர் சையத் கபீா், கருா் மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ், MJTS மாவட்ட தலைவா் உவைஸ் அகமது, தாஜ்தீன், சகன்பாஷா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கரூர்_மாவட்டம் 11.03.2020
நாகை தர்ணா போராட்டத்தில் மஜக சார்பில்.. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில துணைச் செயலாளர் பங்கேற்று கண்டன உரை!
மார்ச்.11, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி, மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரையாற்றினார்கள். இதில் திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் தெத்தி ஆரிப், MJVS மு.மாவட்ட செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகூர் ஜாகிர், நகர நிர்வாகிகள் செல்லதுரை, செமீர்தீன், அனாஃப், பாரக் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.