பல் தேசிய இனங்களை துண்டாட துடிக்கும் பாசிச பாஜக அரசு! நாமக்கல் காத்திருப்பு போராட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமத் உரை!

நாமக்கல்:மார்ச்.12.,

குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் நாமக்கல் பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அஹமது, அவர்கள் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலமாக இந்தியாவில் வாழும் பல் தேசிய இனத்தை, சிறுபான்மையினரை ஆதிவாசிகளை துண்டாட துடிக்கின்றது மத்தியில் ஆளும் பாஜக அரசு

சங்பரிவாரங்களை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையும், கலவரத்தையும் தூண்டுகின்ற முயற்சியில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டிய அவர், காவல் துறையின் மெத்தனப் போக்கு கலவரகாரர்களுக்கு ஊக்கமளிப்பதாக குற்றம் சாட்டினார்.

போராட்டத்தில் திரளான பெண்களும், ஆண்களும், பங்கேற்றனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஈரோடு பாபு ஷாகின்ஷா, நாமக்கல் மாவட்ட செயலாளர் சையத் கபீர், மாவட்ட துணை செயலாளர் மன்சூர் அலி, MJTS செயலாளர் ஜான் பாஷா, மாவட்ட பொருளாளர் மகபூப் பாஷா,சகன் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாமக்கல்_மாவட்டம்
11.03.2020

Top