நாகை தர்ணா போராட்டத்தில் மஜக சார்பில்.. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில துணைச் செயலாளர் பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.11,
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது.

மூன்றாம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை. செல்லச்சாமி, மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரையாற்றினார்கள்.

இதில் திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் தெத்தி ஆரிப், MJVS மு.மாவட்ட செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகூர் ஜாகிர், நகர நிர்வாகிகள் செல்லதுரை, செமீர்தீன், அனாஃப், பாரக் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.