நாட்டை பிளவு படுத்தி விட்டார் பிரதமர் மோடி! கரூரில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது பேச்சு!

கரூரில் கருப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பாக குளித்தலையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது உரையாற்றினார்.

அவர் பேசியதாவது வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதாக தேர்தல் வாக்குறுதி தந்த நரேந்திரமோடி நாட்டை மதரீதியாக பிளவு படுத்தும் பிற்போக்கு பாதைக்கு அழைத்துச் செல்கின்றார் என்று பேசினார்.

இதில் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கோவை செய்யது, திருச்சி மாவட்ட மமக தலைவர் உதுமான் அலி, உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள்.

இக் கூட்டத்தில் திரளான ஆண்களும், பெண்களும், கலந்து கொண்டார்கள்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின மாநில துணைச் செயலாளா் ஈரோடு பாபு ஷாகின்ஷா, கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில், நாமக்கல் மாவட்ட செயலாளர் சையத் கபீா், கருா் மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ், MJTS மாவட்ட தலைவா் உவைஸ் அகமது, தாஜ்தீன், சகன்பாஷா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கரூர்_மாவட்டம்
11.03.2020