நாகூர் பட்டின சேரியில் தூண்டில் முள் துறைமுகம் அமைக்கப்படும்.! மஜக பொதுச் செயலாளர் முதமி முன் அன்சாரி MLA கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்.!

சென்னை.மார்ச்.11.,

இன்று சட்டப் பேரவை கூடியதும் கேள்வி நேரத்தில், நாகூர் பட்டினச் சேரி வெட்டாற்று வடகரையில் தூண்டில் வளைவு துறைமுக அமைக்கப்படுமா? என நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், அங்கு 20 கோடி மதிப் 370 மீட்டர் நீளத்துக்கு அங்கு தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்கப்படும் என பதில் அளித்தார்.

அப்போது கூறிய தமிமுன் அன்சாரி MLA அவர்கள்,அருகில் காரைக்காலில் தனியார் துறைமுக பல் சரக்கு கப்பல் போக்குவரத்து காரணமாக மணல் திட்டு குவிவதாகவும், அதில் படகுகள் மோதி மீனவர்கள் உயிர் பலி ஏற்படுவதாகவும், எனவே விரைந்து பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கூறினார்..

பிறகு அமைச்சர் அறிவிப்புக்கு அவர் நன்றி கூறினார்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டமன்ற_வளாகம்
11.03.2020