கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகமே ஆடிப் போயிருக்கிறது. நமது நாட்டில் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து முடக்கப்பட்டு, மாநில எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன. அரசு எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பாராபட்சமின்றி ஏற்று, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுக்க முன் எச்சரிக்கையாக, 77 மாவட்டங்களை கண்டறிந்து, அங்கு எல்லைகளை மூடி, ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய தமிழக மாவட்டங்களும் வருகிறது. இந்திலையில் தமிழக சட்டமன்றம் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என்பது நியாயமற்றதாகும். குளிரூட்டப்பட்ட அறையில் கூடக் கூடாது, ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வேண்டும், தேவையற்ற பயணங்கள் மற்றும் குழு சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டல்களை வழங்கி விட்டு, அது நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பொருந்தாது என்பது எந்த வகையில் நியாயம்? இதனால் பல MLA-க்கள் கவலையடைந்துள்ளனர். அவர்கள் இத்தருணத்தில் தொகுதியில் இருந்து அதிகாரிகளுக்கு வழிகாட்ட வேண்டிய கடமையும் உண்டு. எனவே அசாதாரண சூழலை கவனத்தில் கொண்டு, அனைவரின் நலனையும் எண்ணிப்
Author: admin
மஜக தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக வீடு வீடாக சென்றுகொரோனாவிழிப்புணர்வு_பரப்புரை..!
சென்னை.மார்ச்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் மூலமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும் பல பள்ளிவாசல்களிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பிரச்சாரத்தில் மாவட்டச் செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் ஈடுபட்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்சென்னைகிழக்குமாவட்டம் 20-03-2020
சலவை தொழிலாளர்களுக்கு உள்இடஓதுக்கீடு வேண்டும்.! பிளாஸ்டிக்கழிவுகளிலிருந்து சாலைபோடவேண்டும்! சட்டப்பேரவையில்முதமிமுன்அன்சாரி
மார்ச் 21 அன்று சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.. சலவை தொழில் செய்யும் வண்ணார் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பிரித்து தனி உள் ஒதுக்கீடு வழங்கி அது குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று பேசினார். இதை அறிந்து, அவருக்கு நன்றி சொன்ன, வண்ணார் சமூக மக்களிடம் இதற்காக தானும், தனியரசும் முன் முயற்சி செய்வதாகவும் கூறினார். தனியரசு அவர்கள் இக்கோரிக்கையை அவரிடம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. அது போல் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சாலைகள் அமைப்பது குறித்து தமிழக அரசு யோசிக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் அந்த முயற்சிகள் நடைபெறுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் பயனுள்ள வகையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்
கள்ளர் சீர்த்திருத்தப் பள்ளிகளை சீரமைக்க வேண்டும்! சட்டப்பேரவையில் முதமிமுன் அன்சாரி MLA கோரிக்கை ஏற்பு.!
மார்ச் 21 அன்று, பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசினார். கள்ளர் சீர்த்திருத்த பள்ளிகளை தமிழக அரசு மேம்படுத்தி அதன் உள் கட்டமைப்புகளை சீர்படுத்தி, போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார். அவரது கோரிக்கையை ஏற்கும் வகையில், அமைச்சர் வளர்மதி அவர்கள் கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு மேஜை, இருக்கைகள் வாங்க 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும், பள்ளிகளில் சாய்தள வசதி ஏற்படுத்த 2 கோடியே 40 லட்சத்து 79 ஆயிரம் வழங்கப்படும், 25 விடுதிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட 3 கோடி ஒதுக்கப்படும், கணினிகள் வாங்க 96 லட்சத்து 41 ஆயிரம் வழங்கப்படும், 6-ஆம் வகுப்பில் ஆங்கில வகுப்புகள் தொடங்க 1 கோடியே 50 லட்சம் வழங்கப்படும் என 5 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். இதற்காக அரசுக்கும், அமைச்சருக்கும் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார். இக்கோரிக்கையை பேரவையில் எழுப்பியதற்காக, அவரை அமைச்சர் செல்லூர்.ராஜ், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA., மற்றும் பல MLA-க்களும் பாராட்டு தெரிவித்தனர். இது அம்மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை
மலேசியாவில் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்.! மலேசியா அமைச்சரிடம் பேசினார் மஜக பொருளாளர் எஸ்எஸ்ஹாரூன் ரசீது..!
மலேசியா.மார்ச்.23., உலகமுழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அச்சம் அடைந்து வரும் சூழலில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு விமானம் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா மற்றும் வியாபார நிமித்தமாக வந்த பயணிகள் தாய் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல், இந்தியாவிற்கு சென்று மலேசியா திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிகளை அழைத்துவர 19 மலேசிய சிறப்பு விமானங்கள் இந்தியாவிற்கு செல்கின்றன. இந்நிலையில், இதற்கு ஏற்பாடு செய்யும் மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மலேசியாவில் இருந்து ஆள் இல்லாமல் இந்தியா செல்லும் சிறப்பு விமானத்தில் மலேசியாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்கள் நாங்கள் அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறோம் ஆனால் இந்திய அரசாங்கம் அனுமதி தர மறுக்கிறது என்று ஹாரூன் ரசீது அவர்களிடம் கூறினார். மலேசியாவில் தங்குவதற்கு இடம், உணவு மற்றும்