சலவை தொழிலாளர்களுக்கு உள்இடஓதுக்கீடு வேண்டும்.! பிளாஸ்டிக்கழிவுகளிலிருந்து சாலைபோடவேண்டும்! சட்டப்பேரவையில்முதமிமுன்அன்சாரி

மார்ச் 21 அன்று சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது..

சலவை தொழில் செய்யும் வண்ணார் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பிரித்து தனி உள் ஒதுக்கீடு வழங்கி அது குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று பேசினார்.

இதை அறிந்து, அவருக்கு நன்றி சொன்ன, வண்ணார் சமூக மக்களிடம் இதற்காக தானும், தனியரசும் முன் முயற்சி செய்வதாகவும் கூறினார். தனியரசு அவர்கள் இக்கோரிக்கையை அவரிடம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

அது போல் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சாலைகள் அமைப்பது குறித்து தமிழக அரசு யோசிக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் அந்த முயற்சிகள் நடைபெறுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் பயனுள்ள வகையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்