இந்தியாவின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர், எழுத்தாளர், அறிவுஜீவி என கொண்டாடப்படும் ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களை கைது செய்திருப்பதை மனித நேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது. பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வு (NIA) அமைப்பால் கடந்த 14.04.2020 அன்று கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார். https://m.facebook.com/story.php?story_fbid=2409167445849683&id=700424783390633 அவருக்கு ஆதரவாக எழுத்தாளர் அருந்ததிராய் உள்ளிட்ட நாடறிந்த அறிவுஜீவிகளும், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்களும்,மனித உரிமை மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்களும் களமிறங்கி போர் குரல் எழுப்பி வருகின்றனர். வெறுப்பு அரசியலில் வழியே பிரிவினைவாத நடவடிக்கைகளை வளர்த்து வரும் தீய சக்திகள் பாதுகாக்கப்படுவதும், தேசத்தின் முகவரிகளாக இருக்கும் அறிவுஜீவிகள் ஒடுக்கப்படுவதும் வேதனையளிக்கிறது. தங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடுபவர்களை அடக்கு முறை சட்டங்கள் வழியே ஒடுக்க நினைப்பது ஃபாஸிசத்தின் கோர முகமாகும். கொரணா பரபரப்பில் நாடே மூழ்கியிருக்கும் சமயம் பார்த்து அவரை கைது செய்திருப்பது ஒரு வகை அரச தந்திரப் போக்காகும். அறிவுஜீவிகளை ஒழிக்க நினைக்கும் சர்வாதிகார அரசுகள் வெற்றிப் பெற்றதில்லை என்பதை வரலாற்றில் படிக்கிறோம். அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று, அறிவுத் தளத்தில் அவருக்கு எதிராக செயலாற்றுவதே சிறந்த ஆளுமைப்
Tag: முதமிமுன்அன்சாரி_MLAஅறிக்கை!
பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசிக்கவேண்டும்! முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
கொரோனோ வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். நாடும், மக்களும் இத்துயரத்திலிருந்து விரைந்து மீள வேண்டும் என்பதே அனைவரின் இதயப்பூர்வமான விருப்பமாகும். அரசியல், சாதி, மதம், இனம், வட்டாரம் என பேதங்களை கடந்து மக்கள் யாவரும் ஒரே மனநிலையில் அணிவகுத்து நிற்கிறார்கள். மக்கள் சோதனையான ஒரு சூழலில் தவிக்கும் போது, நிவாரணம் மற்றும் நிதி உதவிகளில் மத்திய அரசு இறுக்கமான போக்குடன் இருப்பது நல்லதல்ல. ஆலை தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவ தொழிலாளர்கள், சினிமா துறை தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள், சிறு கடை ஊழியர்கள், வாடகை வாகன ஓட்டிகள், சுமை தூக்குவோர், மாற்றுத்திறனாளிகள், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், கொரியர் போன்ற சேவை பிரிவில் பணியாற்றியோர் என ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கு குறைவாக சம்பாதித்த அனைவரும் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகி உள்ளனர். பசியும், வறுமையும் கெளரவ தற்கொலைகளையும், பட்டினி சாவுகளையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மத்திய அரசு பொறுப்புணர்வுடன் அக்கறை காட்ட வேண்டும். GST உள்ளிட்ட வரிகளை பெருமளவில் சேமித்து வைத்திருக்கும் மத்திய அரசு
மலேசியா சென்றுள்ள இந்தியர்களின் தவிப்பை மத்தியஅரசு புரிந்துக்கொள்ளவேண்டும் : முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
மலேஷியாவுக்கு குறுகிய கால பயணமாக சென்ற தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அங்கு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் வசிக்கும் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள மினாரா சிட்டி ஒன், மலாயா மேன்ஷன், சிலாங்கூர் மேன்ஷன் ஆகியன பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளதால் அங்கு உள்ளேயும், வெளியேயும் யாரும் போக முடியாத சூழல் உள்ளது. அவர்கள் உணவு, மருத்துவம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தொடர் ஊரடங்கால் அவர்கள் பொருளாதார நெருக்கடியிலும் உள்ளனர். அங்குள்ள இந்திய தூதரகம் இதுவரை உருப்படியான எந்த உதவிகளையும் வழங்கவில்லை. அவர்களுக்கு அடிப்படை தேவைகளை கிடைக்க அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இதுவரை அவசரமாக நாடு திரும்ப 3500 பேர் வரை இந்திய தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களை மீட்க நீதிமன்றம் நம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இனியும் தாமதிக்காமல் உரிய துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 10.04.2020
வாழ்வுரிமை மாநாடு ஏற்படுத்திய எழுச்சி.. மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA நன்றி கடிதம்..!
ஆருயிர் மனிதநேய சொந்தங்களே.... இறையருள் சூழ இக்கடிதம் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். அடிக்கடி கடிதம் வழியாக உங்கள் அனைவரோடும் உரையாட வேண்டும், உறவாட வேண்டும் என மனம் விரும்பினாலும், அயராத பயணங்களும் தொடர்ச்சியான பணி சுமைகளும் அதை நிறைவேறாமலேயே தடுத்துவிடுகின்றன என்பதுதான் உண்மை. சொந்தங்களே.. நமது கட்சியை தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நாம் அனைவருமே ஓடியாடி உழைத்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான், ஐந்தாம் ஆண்டில் வலிமை மிக்க அரசியல் சக்தியாக உருப்பெற்றிருக்கிறோம். சற்றே திரும்பிபார்க்கின்ற போது, இவற்றையெல்லாம் நாம் எப்படி சமாளித்து கடந்து வந்தோம் என்ற ஆச்சரியங்கள் புருவங்களை உயர்த்த செய்கின்றன. அலைகடலில் போராடி, புயல் வீச்சில் புரண்டு, எதிர் நீச்சல் அடித்து, நெருப்பு வளையங்களை கடந்து நமது பயணம் சாகசங்களாக அமைந்திருக்கிறது. அரசியலின் ஆபத்தான வளைவுகளில் விழுந்து விடாமல், நமக்கான பாதைகளில் பயணித்தவாரே வெற்றிகளை குவித்துள்ளோம். அதன் விளைவாக, நமது சட்டமன்ற பணிகளை பாராட்டி மஹாராஷ்டிரா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் நிர்வாக குழுமமான புனே அமைதி பல்கலைக்கழகம் "இந்தியாவின் முன்மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினர்" என்ற விருதை வழங்கிய போது, அது மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கிடைத்த மாணிக்கம்
டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு இது மற்றொரு பாடம்! முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!
இந்திய தலைநகர் டெல்லியின் சட்டமன்றத்திற்கு நடைப்பெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. CAA உள்ளிட்ட குடியுரிமை திருத்த ஆதரவு பரப்புரையை தீவிரமாக பாஜக முன்னெடுத்தது. அதன் தலைவர்களின் பேச்சுகள் தீயை கக்கின. ஆனால்,வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி ஆம் ஆத்மி பரப்புரை செய்தது. அந்த அணுகுமுறையை டெல்லி மக்கள் ஆதரித்துள்ளனர். இந்தியாவின் எல்லா மாநில மக்களும் வசிக்கும் தலைநகரில் வெளியாகியிருக்கும் இத்தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாகும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தல், வெறியூட்டும் பரப்புரை, வன்முறையை தூண்டும் முயற்சிகள் என பாஜக எடுத்த கொல்லைப்புற அரசியலுக்கு டெல்லி மக்கள் எதிராக திரும்பி உள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி வருவது இயல்பு. வாக்குப்பதிவும் முந்தைய தேர்தலை விட குறைந்திருந்தது. இந்த நிலையிலும் கூட மக்கள் பாஜக வின் "தாமரை "யை விட, ஆம் ஆத்மியின் "துடைப்பம் " சின்னம் நாட்டுக்கு நல்லது என முடிவு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் நடைப்பெற்ற ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவை தொடர்ந்து, டெல்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு