மலேசியா சென்றுள்ள இந்தியர்களின் தவிப்பை மத்தியஅரசு புரிந்துக்கொள்ளவேண்டும் : முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

மலேஷியாவுக்கு குறுகிய கால பயணமாக சென்ற தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அங்கு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் வசிக்கும் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள மினாரா சிட்டி ஒன், மலாயா மேன்ஷன், சிலாங்கூர் மேன்ஷன் ஆகியன பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளதால் அங்கு உள்ளேயும், வெளியேயும் யாரும் போக முடியாத சூழல் உள்ளது.

அவர்கள் உணவு, மருத்துவம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

தொடர் ஊரடங்கால் அவர்கள் பொருளாதார நெருக்கடியிலும் உள்ளனர்.

அங்குள்ள இந்திய தூதரகம் இதுவரை உருப்படியான எந்த உதவிகளையும் வழங்கவில்லை.

அவர்களுக்கு அடிப்படை தேவைகளை கிடைக்க அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

இதுவரை அவசரமாக நாடு திரும்ப 3500 பேர் வரை இந்திய தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களை மீட்க நீதிமன்றம் நம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இனியும் தாமதிக்காமல் உரிய துரித நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,

பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
10.04.2020