மார்ச்.02., கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு மாபெரும் எழுச்சியுடன் நடைப்பெற்றது. அதற்காக 1மாதமாக தியாக மனப்பான்மையுடன் இரவு பகலாக உழைத்த கோவை மாவட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கு தலைமையின் சார்பில் விருந்தோம்பல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள் உரையாற்றியதாவது. https://m.facebook.com/story.php?story_fbid=2308524319247330&id=700424783390633 ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியை இம்மாநாடு கண்டுள்ளது செம்மொழி மாநாட்டிற்கு இணையான ஒரு மாநாடென்றால் அது மஜக வின் மாநாடுதான் என பத்திரிக்கையாளர்கள் கூறியதை நினைவூட்டினார். மேலும் இம்மாநாட்டிற்காக கோவையில் மாநில பொருளாளரும் மாநாட்டுக்குழு தலைவருமான எஸ்.எஸ். ஹாருண்ரஷீது, அவர்கள் தலைமையில் பிரச்சாரக்குழு, வரவேற்புக்குழு, நிதிக்குழு, மைதான பணிகள் குழு, உள்ளிட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு. அந்த குழுக்களின் தொடர் சூறாவளி பணிகளை மிகவும் விலாவரியாக சிலாகித்து பேசினார். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த காசுகளை செலவு செய்து தன்னெழுச்சியுடன் பொதுமக்களும், ஜமாத்தினர்களும், திரளாக வருகை தந்ததை பற்றி கூறியவர் அதற்காக உழைத்து தமிழகம் முழுவதும் உள்ள மஜக நிர்வாகிகளின் தியாக உழைப்பை நினைவுபடுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் மத்தியில்
Tag: M.தமிமுன் அன்சாரி
தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தைதான் இங்கு நடத்துகிறோம்…! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!
மார்ச்.10, இன்று சென்னை பல்லாவரத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது... https://m.facebook.com/story.php?story_fbid=2323959301037165&id=700424783390633 CAA சட்டத்தில் அகதிகளிடம் பாகுபாடு காட்ட கூடாது என்கிறோம். பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிருந்து இந்தியாவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கிறது. ஆனால் இந்திய குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் மதத்தால், இனத்தால், மொழியால் பாதிக்கபட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை பறிகொடுத்துவிட்டு 30 ஆண்டுகளை கடந்து அகதிகளாக நம் மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை CAA சட்டத்தில் ஏன் சேர்க்க மறுக்கிறீர்கள்? என கேட்கிறோம். அவர்களுக்கு குடியுரிமை கொடுக்ககூடாது என்று தமிழ்நாட்டில் யாராவது சொன்னார்களா..? அகதிகளிடம் பாராபட்சம் காட்ட கூடாது. மனித நேயத்தோடு அவர்களை அணுக வேண்டும். அவர்கள் வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். அவர்களிடம் பேதம் காட்டலாமா? இச்சட்டத்தின்படி, பிஜி தீவிலுள்ள இந்தியர்களோ, ரீ யூனியன் நாட்டை சார்ந்த தமிழர்களோ அகதி அந்தஸ்தை பெற்று குடியுரிமை பெற தகுதி பெற முடியாது. எல்லை நாடுகளை சேர்ந்த மதத்தால் பாதிக்கப்படும் நோபாள், பூட்டான் நாடுகளை சேர்ந்த
குடியுரிமை சட்டங்கள் தொடர்பான வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்! முதல்வரிடம் முதமிமுன்அன்சாரி MLA நேரில் வழங்கினார்!
மார்ச் 07, இன்று நாகப்பட்டினம் ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் நாகைக்கு வருகை தந்தார். விழா முடிந்ததும் மேடையில் அவரை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கடந்த பிப்ரவரி 29 அன்று கோவையில் மஜக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முதன்மை தீர்மானங்களை நேரில் வழங்கினார். தமிழக மக்களின் மன நிலையை மதித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MP, திரு.செல்வராஜ் உள்ளிட்டோரும் அருகில் இருந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணை செயலாளர் சாகுல் ஹமீது, முபீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
பேராசிரியர் அன்பழகன் மரணம், திராவிடஇயக்கத்தின் தீபம் அணைந்தது! முதமிமுன்அன்சாரி MLA இரங்கல்!
தந்தை பெரியாரின் மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பிகளில் மூத்தவராகவும், கலைஞரின் உற்ற நண்பராகவும், திராவிட இயக்க போராளியாகவும் திகழ்ந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இன்று மறைவுற்றார் என்பது தமிழ் உலகிற்கு ஒரு துயரச் செய்தியாகும். தஞ்சை சமவெளியாம் நாகை மாவட்டத்தில் பிறந்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்று, பெரியாரின் ஈரோட்டு பாசறையில் பொதுவாழ்வை தொடங்கியவர். திருவாரூரில் நடைப்பெற்ற மீலாது விழா மாநாட்டில் தான் பேராசிரியர் அன்பழகன் அவர்களும், கலைஞர் அவர்களும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். அந்த இனிய நட்பு அவர்களை உற்ற கொள்கை நண்பர்களாக மாற்றியது. 43 ஆண்டு காலம் திமுகவின் பொதுச் செயலாளராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் அவரது சிறப்புகளை உணர்த்தினாலும், திராவிட இயக்க கொள்கைகளை அணையாமல் பாதுகாத்த மாவீரர் என்பதே அவரது பெருமையை பறைசாற்றும். எந்த நிலையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத சுயமரியாதை போராளியாக அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களில் ஏவுகணையாய் செயல்பட்ட அவரது தீரமும், தமிழர் வாழ்வுரிமைகளில் அவர் காட்டிய அக்கறையும், பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளில் சமரசம் செய்யாத முனைப்பும் அவரை தமிழர்களின் இனமானப் பேராசிரியர் என போற்ற காரணங்களாய்
உள்நாட்டு பிரச்சனையை மோடி சர்வதேச பிரச்சனையாக்கி விட்டார்..! முதமிமுன்அன்சாரி MLA குற்றச்சாட்டு.!
தென்காசி.மார்ச்.6, புளியங்குடியில் அத்தக்வா பயிலகம் சார்பில், குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாநாடு நடைப்பெற்றது, இதில் செ.ஹைதர் அலி, தி.வேல்முருகன், அய்யாவழி பாலமுருகன், காயல் மஹ்பூப், புளியங்குடி செய்யதலி, தென்காசி நெய்னா உள்ளிட்டோர் பேசினர். இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றியதாவது... நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க நடைபெறும் இப்போராட்டத்தில், நாம் சாதி, மதங்களை கடந்து போராடுகிறோம் என்பதே ஒரு சிறப்புத்தான். அதற்கு இந்த மேடையும் ஒரு உதாரணமாகும். அவர்கள் மக்களை மதரீதியாக பிரிக்க நினைத்தார்கள். ஆனால், நாம் நாட்டைக் காக்க ஒன்றாக போராடுகிறோம். நாட்டிலேயே முதன் முதலாக அஸ்ஸாமில் இந்த போராட்டங்களை தொடங்கி வைத்ததே இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் தான். அவர்கள் தான் பாதிப்பை முதலில் உணர்ந்தவர்கள். இன்று அஸ்ஸாமின் தடுப்பு முகாம்களில் நிலவும் அவலங்கள் கொடுமையானது. அங்கு பாலுக்கு அழும் குழந்தைகளின் பசி தீர்க்க. நீண்ட வரிசையில் தாய்மார்கள் காத்துக் கிடக்கிறார்கள். முகாமில் உள்ள மருத்துவரை பார்க்க பெரியவர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கிறார்கள். ஒரே கூடாரத்தில் பலர் அடைக்கப்பட்டு நெரிசலில் தினமும் உயிரிழப்புகள் நேரிடுகிறது. "கழிவறை" பயன்படுத்த மக்கள் 'வரிசையில்' நிற்கும் கொடுமை நிலவுகிறது. அங்கு NRC அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள சீரழிவுகள்