குடியுரிமை சட்டங்கள் தொடர்பான வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்! முதல்வரிடம் முதமிமுன்அன்சாரி MLA நேரில் வழங்கினார்!

மார்ச் 07,

இன்று நாகப்பட்டினம் ஒரத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் நாகைக்கு வருகை தந்தார்.

விழா முடிந்ததும் மேடையில் அவரை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கடந்த பிப்ரவரி 29 அன்று கோவையில் மஜக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முதன்மை தீர்மானங்களை நேரில் வழங்கினார்.

தமிழக மக்களின் மன நிலையை மதித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது நாகை நாடாளுமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MP, திரு.செல்வராஜ் உள்ளிட்டோரும் அருகில் இருந்தனர்.

இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணை செயலாளர் சாகுல் ஹமீது, முபீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.