சென்னை.ஜனவரி.13.., குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு (CAA, NRC, NPR) எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காஷிஃபி முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற தலைவர்களும் சந்தித்து உரையாடினர் . பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 13-01-2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
கறுப்புசட்டங்களுக்கு எதிராக மஜக வேலூர் மாவட்டம் சார்பாக எழுச்சிமிகு பொதுக்கூட்டம்..!
வேலூர்.ஜன.12.., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று 11-01-2020 மாலை வேலூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் A.முஹம்மத் யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மே17 ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது, திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மேலும் இப்பொதுக்கூட்டத்திற்கு வேலூர் அவைத்தலைவர் (திமுக) தி.அ.முகமது சகி, மாநில து.செயலாளர் (மஜக) J.M.வசீம் அக்ரம், சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் (மஜக) S.G.அப்சர் சையத், வேலூர் மாவட்ட தலைவர் டிக்காராமன் (காங்கிரஸ்) சிறுபான்மைதுறை மாவட்ட தலைவர் வாஹித் பாஷா (காங்கிரஸ்), தமுமுக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மத் ஹசன், மஸ்தான், மாநில துணைச் செயலாளர் எஸ்,ஏ ஜாபீர் (விசிக), தொகுதி செயலாளர் கோட்டி (எ) கோவேந்தன்(விசிக), மாவட்டச் செயலாளர் சான் பாஷா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
JNU மாணவர்களை தாக்கியவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? முதமிமுன் அன்சாரி MLA கேள்வி
சென்னை.ஜனவரி.11., இன்று, சென்னை புதுப்பேட்டை மக்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசினார். அப்போது கூறியதாவது... ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் போராடியபோது, பல்கலைக்கழக துணைவேந்தர் அனுமதி பெறாமலேயே டெல்லி போலிஸ் உள்ளே நுழைந்து அராஜகம் செய்தது. விளக்கை அணைத்து விட்டு மாணவிகளின் விடுதிகளுக்கும் சென்று கோழைத்தனமாக தாக்கினார்கள். மாணவர்களை கழிவறைகளுக்குள் சென்று தேடித் தேடி தாக்கினார்கள். ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து, ABVP குண்டர்கள் முகமூடி அணிந்து தாக்கினார்கள். இது நன்கு திட்டமிடப்பட்ட வன்முறையாகும். நாங்கள்தான் மாணவர்களை தாக்கினோம் என்று இந்து ரக்க்ஷா தளம் என்ற அமைப்பு மார் தட்டுகிறது. மேலும் இதே போல் பிற பல்கலைக்கழகங்களுக்குள்ளும் சென்று மாணவர்களை தாக்குவோம் என பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். ஆனால் தாக்கியவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. டெல்லி போலிஸ், JNU மாணவர்களை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்லி போலிஸ் ஒரு தலைபட்சமாக நடக்கிறது. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே அதற்கு காரணம். குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக
தேனிமாவட்ட மஜக சார்பாக வாகனங்களில் NO CAA NRC NPR ஸ்டிக்கர் ஒட்டி எதிர்ப்பு பிரச்சாரம்!!
ஜன.11., தேனி மாவட்டம் கம்பத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரியும், தமிழக மக்களுக்கு இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேனி மாவட்ட மஜக சார்பில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.. கம்பம் மஜக மாவட்ட தலைமையகம் முன் நடைபெற்ற பிரச்சாரத்தில் NO NRC,NPR ,CAA வாசகத்துடன் இருசக்கர வாகனம்,ஆட்டோ,லாரி போன்ற வாகனங்களில் வருபவர்களிடம் இச்சட்டம் குறித்து எடுத்துரைத்தனர். இது குறித்து கவனமாக கேட்ட பொதுமக்கள் இச்சட்டத்தில் மிகப்பெரிய அபாயம் உள்ளது ஆகவே எங்களுடைய வாகனத்தில் இந்த ஸ்டிக்கரை ஒட்டுங்கள் என தெரிவித்து தாங்களாக முன்வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேனி மஜக வினரின் இச்செயலை வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தேனி_மாவட்டம் 10.01.2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக. S.உமர் பாருக் த/பெ: சக்கரை முகம்மது 2/4-A3 திருமோகடர் ரோடு Y.ஒத்தகடை மதுரை மாவட்டம். அலைபேசி: 9578169153 நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி. 11-01-2020