கறுப்புசட்டங்களுக்கு எதிராக மஜக வேலூர் மாவட்டம் சார்பாக எழுச்சிமிகு பொதுக்கூட்டம்..!


வேலூர்.ஜன.12..,

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று 11-01-2020 மாலை வேலூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் A.முஹம்மத் யாசின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மே17 ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது, திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

மேலும் இப்பொதுக்கூட்டத்திற்கு வேலூர் அவைத்தலைவர் (திமுக) தி.அ.முகமது சகி, மாநில து.செயலாளர் (மஜக) J.M.வசீம் அக்ரம், சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் (மஜக) S.G.அப்சர் சையத், வேலூர் மாவட்ட தலைவர் டிக்காராமன் (காங்கிரஸ்)

சிறுபான்மைதுறை மாவட்ட தலைவர் வாஹித் பாஷா (காங்கிரஸ்), தமுமுக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மத் ஹசன், மஸ்தான், மாநில துணைச் செயலாளர் எஸ்,ஏ ஜாபீர் (விசிக), தொகுதி செயலாளர் கோட்டி (எ) கோவேந்தன்(விசிக), மாவட்டச் செயலாளர் சான் பாஷா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முகமது சாதிக் (பொறியாளர்) மாவட்ட தலைவர் சவுக்கத் அலி (INLP) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட மஜக வேலூர் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நன்றியுரை மு.ஜாகிர் உசேன் நிகழ்த்தினார்.

தகவல்:
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
11-01-2020