தூத்துக்குடிமாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!

தூத்துக்குடி.ஜனவரி.12.,

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக இன்று தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்து கொண்டனர்.

வடக்கு ஆத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கமால், தீன் மற்றும் ஆஷிக் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மஜக மாநிலத் துணைச் செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

இன்று (12-01-2020) வடக்கு ஆத்தூரில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் N.M.தமிமுல் அன்சாரி அவர்கள் முன்னிலையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முகமது நஜிப் மற்றும் ராசுகுட்டி ஆகியோர் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்து உரையாற்றினர்.

இந்நிகழ்வில் மாவட்ட IT WING செயலாளர் சபீர் அலி திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் மீராசாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர். வடக்கு ஆத்தூர் கிளைச் செயலாளர் இப்ராகிம், தெற்கு ஆத்தூர் கிளைச் செயலாளர் சபீர்அலி ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_மாவட்டம்
12-01-2020

Top