சென்னை.ஜனவரி 24, இன்று மதியம் 2 மணிக்கு சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணி நடைபெற்றது. தன்னெழுச்சியாக மக்கள் வரும் வழியெங்கும் இணைந்தது பேரெழுச்சியாக இருந்தது. இதனால் பிராட்வே சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. தொடர்ந்து பாரிமுனை குறளகம் அருகே பெரும் கூட்டம் திரண்டதால் அது ஆர்ப்பாட்ட களமாக மாறியது. இதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசியதாவது... நாடெங்கும் மக்கள் எழுச்சி பெருகி வருவதால் போராட்டம் தொய்வின்றி அமைதி வழியில் தொடர்கிறது. மத்திய அரசு திணறுகிறது. அமைதியை ஏற்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றம், வன்முறை முடிந்த பிறகு இது தொடர்பான வழக்குகளை விசாரிப்போம் என பொறுப்பில்லாமல் சொல்கிறது. வன்முறை எங்கே நடக்கிறது? ஒரிரு இடங்களில் நடந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அமைதியாகத் தானே போராட்டங்கள் நடக்கிறது. வர வர உச்ச நீதிமன்றத்தின் மீது நமக்கு நம்பிக்கை குறைகிறது. இவர்கள் மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். மத்திய அரசு பிடிவாதம் காட்டக் கூடாது. மக்கள் உணர்வுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இதில் ஒரு அடி கூட பின் வாங்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். ஜனநாயக சக்திகளாகிய நாங்களும் சொல்கிறோம். இதிலிருந்து மக்களாகிய
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
குடியுரிமை திருத்த சட்டத்தால் அஸ்ஸாமில் இலட்சக்கணக்கான இந்துக்கள் பாதிப்பு : முதமிமுன்அன்சாரி_MLAபேச்சு!
தமிழ்நாடு மீனவர் சங்க பொதுச் செயலாளர் தாஜ்தீன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வு மல்லப்பட்டினத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் இரா.அன்பழகனார், அப்துல்ரஹ்மான் Ex.MP, து.கிருஷ்ணசாமி வாண்டையார், தம்பிக்கோட்டை நிலக்கிழார் எம்.கே.எஸ்.செந்தில் குமார், பண்ண வயல் நிலக்கிழார் எஸ்.ராஜா தம்பி சேர்வை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மீனவர்களின் நலன்களுக்காக தான் சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை குறிப்பிட்டார். பிறகு, குடியுரிமை கறுப்பு சட்டங்கள் தொடர்பாக பேசியவர். NRC போன்ற சட்டங்களால் அஸ்ஸாமில் லட்சக்கணக்கான இந்துக்களின் குடியுரிமை பறிபோய் இருப்பதாக கூறியவர். இது நாடு முழுக்க அமுலானால் எல்லா சமூக மக்களும் பாதிப்படைவார்கள் என்றும், எனவே தான் எதிர்ப்பு போராட்டங்கள் வலுவாக முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார். அதனால் தான் நாள்தோறும் எல்லா சமூக மக்களின் ஆதரவும் பெருகி வருவதாக கூறியவர். நாட்டுக்கு தொழிற்சாலைகள், நல்லகல்வி கூடங்கள், தரமான மருத்துவமனைகள், அகன்ற சாலை போன்றவை தான் தேவை என்றார். இது போன்ற பிரிவினைகளை, குழப்பங்களை ஏற்படுத்தும் சட்டங்கள் தேவையில்லை என்பதே மக்களின் எண்ணமாகும் என்றும் இடித்துரைத்தார். இந்நிகழ்வில், மாநில செயலாளர் நாச்சிக்குளம்.தாஜூதீன், மஜக
சிவகங்கையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்..! எஸ்எஸ்ஹாரூன்ரசீதுகண்டனஉரை..!!
சிவகங்கை.ஜன.22, சிவகங்கை மாவட்டம் ஐக்கிய ஜமாத், உலமா சபை & அமைப்புகள் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி & பொதுக்கூட்டம் காலை-10 மணியளவில் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, ஆகியோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில், தற்போது நடைபெறும் போராட்டங்களை உலமாக்கள் முன்னெடுத்து வருகிறார்கள். முதலாம் சுதந்திர போராட்டத்தில் உலமாக்களின் பங்களிப்பால் எப்படி போராட்டம் வீரியம் அடைந்ததோ, அதேபோல் தற்போது இரண்டாம் சுதந்திர போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். முஸ்லிம்களை பொருத்தவரைக்கும் தேசிய கொடியை கையில் ஏந்தினால் சுதந்திரத்தை பெறாமல் கொடியை கீழே இறக்கமாட்டார்கள் என்று கூறினார். இந்நிகழ்வுகளில், வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது சேட், சிவகங்கை மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹிர், பசீர், சிவகங்கை நகரச் செயலாளர் ஷேக் பக்ருதின், நகர பொருளாளர் அல்லாஹ் பிச்சை
நெய்வேலியில் குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு விளக்கப் பொதுக்கூட்டம்! எஸ்எஸ் ஹாரூன் ரசீது கண்டனஉரை..!!
ஜன.22, நெய்வேலியில் கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கிய விளக்க பொதுக்கூட்டம் அண்ணாதிடலில் ஹாஜி.சா.சுல்தான் முகைய்தீன் தலைமையில் எழுச்சியோடு நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கெதிராக எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார். பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தனது உரையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதங்களை கடந்த நல்லிணக்கத்தோடு நடைப்பெறும் சம்பவங்களை பட்டியலிட்டவர், மதங்களை கடந்து குடியுரிமை சட்டத்திற்கெதிரான போராட்டத்தை மக்கள் நடத்தி வருவதாகவும், அவ்வகையில் நாமும் இப்போராட்டத்தை எவ்வித சாயமும் இன்றி பாதிக்கப்படும் இந்திய மக்களுக்காக நல்லிணக்கத்தோடு ஒன்றிணைந்து இப்போராட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், தி.வேல்முருகன், ஹாஜாகனி, சிந்தனைச்செல்வன், சர்புதீன்ஷெரீப் உள்ளிட்ட தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிட நெய்வேலி இபுராஹிம் ஒருங்கிணைக்க ஹாஜி.M.அப்துல் ரஹீம் நன்றிக் கூறினார். இதில், மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இபுராஹிம், மாவட்ட துணைச் செயலாளர்கள் யாசின், ரியாஸ் ரகுமான், சலீம், நெய்வேலி டவுன் ஷிப் செயலாளர் ரியாஸ் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹூசைன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட அணி, ஒன்றிய, நகர, கிளை
குடியுரிமை கறுப்புசட்டங்களுக்கு எதிராக தொடர்கிறது அறப்போராட்டம்..! காவலர்வில்சனுக்கு மவுனஅஞ்சலி செலுத்தி உருக்கம்!
ஜனவரி-21, வேதாரண்யத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு எழுந்து முழங்கினர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் மக்கள் திரண்டதால் முக்கிய வீதிகள் ஸ்தம்பித்தன. போக்குவரத்து வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டது. இதில் பல்வேறு சமுதாய மக்களும், ஆர்வத்தோடு திரண்டது வேதாரண்ய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வேதாரண்யம் வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், சமூக நீதி அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு சாதி சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று பேராதரவை வழங்கினர். வயதானவர்களும் ஆர்வத்தோடு திரண்டதால் அவர்களுக்கு நாற்காலி வசதிகள் செய்யப்பட்டது. பெண்கள் வரிசையே நீண்டு திரண்டது பெரும் எழுச்சியாக இருந்தது. பள்ளிக்கூடங்களிலிருந்து 3 மணிக்கே மாணவர்கள் வெளியேறி போராட்ட களத்திற்கு வந்தனர். பெற்றோர்கள் பள்ளி கூடத்திற்கு போன் செய்து பிள்ளைகளை பள்ளி கூடத்திலிருந்து வரவழைத்தது ஒரு திருப்பு முனையாகும். கூட்டத்தை கட்டிடங்களின் மேல் நின்றவாறு முகநூல் கூட்டம் நேரலையில் ஒளிபரப்பு செய்த வண்ணம் இருந்தது.. கூட்டத்தில் எங்கும் தேசிய கொடி மயமாக இருந்தது. அது உணர்ச்சிகரமாகவும் இருந்தது. மருத்துவ சேவை குழு, ஆம்புலன்ஸ்கள் யாவும் தயார் நிலையில் இருக்க, ஆயிரக் கணக்கான