சென்னை.பிப்.18, சட்டமன்றத்திற்கு வண்ணாரப்பேட்டை போலிஸ் அத்துமீறலை கண்டித்து பதாகை ஏந்தி வந்து, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்து இவ்விவாகரம் தொடர்பான கருத்துகளை, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதற்கு முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறிவிட்டு, வெளிநடப்பு செய்தவர், எங்கள் உணர்வுகள் நிராகரிக்கப்பட்டதால், பிப்-19 அன்று 1 லட்சம் பேருடன் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார். அதன் பிறகு நேராக வண்ணாரப்பேட்டை "ஷாஹின் பாக்" போராட்ட களத்துக்கு சென்றார். அங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் பேசியதாவது.. உங்கள் மீதான வன்முறைகளை கண்டித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன். முதல்வர் அவர்கள் அதிகாரிகள் எழுதி கொடுத்ததை பேசி, தவறான தகவலை அவைக்கு கொடுத்தார். அதனால் அதை கண்டித்து வெளிநடப்பு செய்து விட்டு, நேராக இங்கே வந்துள்ளேன். இங்கு போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல், தங்கள் வீதிக்குள் மக்கள் போராடுகிறார்கள். குழந்தைகளோடு பெண்கள் களமாடுகிறார்கள். இது வலிமை மிக்க மக்கள் எழுச்சியாகும். போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கண்ணியமாக உரிமைகளுக்காக போராடுகிறீர்கள். உங்களை அத்துமீறி காவல்துறை தாக்கியதும், இரவு 10 மணி, 11 மணி என்று கூட பாராமல் தமிழகமெங்கும் 300-க்கும்
Tag: M.தமிமுன் அன்சாரி
அமைதியாக மக்கள் போராட இடம் ஒதுக்க வேண்டும்! முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!
பிப்.14, ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக 'தேசம் காப்போம்' என்னும் தலைப்பில் மத்திய அரசின் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தென்னூர் உழவர் சந்தையில் ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் மௌலவி ஹாஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும்போது குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் தொடர்ச்சியாக போராடுகிறார்கள். அவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடி காத்திருப்பு போராட்டம் நடத்திட காவல்துறையே இடம் ஒதுக்கி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அமைதிவழியிலான போராட்டங்களே நீண்ட கால உரிமை போராட்டத்திற்கு உதவும் என்றும், நாம் ஜனநாயக வழியில் அமைதிக்கு இடையூறு இன்றி தொடர்ந்து போராடுவோம் என்றும், இதில் எல்லோரும் கவனமாக இருப்போம் என்றும் கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் மௌலானா ரூஹூல்ஹக் ஹஜ்ரத், தோழர் வேல்முருகன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, அ.ச.உமர் பாரூக், பேராசிரியர் அருணன், பாதிரியார் ஜெகத்கஸ்பர் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். இதில் திருச்சி மாவட்ட மஜக வின் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, பொருளாளர் மெய்தீன், மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள்,
காந்திதேசத்தை கோட்சே தேசமாக மாற்றஅனுமதிக்கமாட்டோம்.! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!!
விருதுநகர்.பிப்.10.., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தோழர் கனகராஜ், தங்கபாண்டியன் MLA , மவ்லவி அபுபக்கர் பாகவி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு... குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டம் மாணவர்களை கடந்து, மக்கள் போராட்டமாக இப்போது மாறிவிட்டது. தமிழகத்தில் திமுக நடத்திய குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் கிராமம், கிராமமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக திமுக-வுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். யார் இதற்காக போராடினாலும் அதை ஆதரித்து வலுப்படுத்த வேண்டும். இனி இப்போராட்டங்களை "குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான கூட்டியக்கம்" அல்லது "கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்ட குழு" என்ற பொது பேனர் களில் முன்னெடுப்பதே அறிவார்ந்த அணுகுமுறையாக இருக்கும். தயவு செய்து இதைப் புரிந்துக் கொண்டு அதன் படி செயலாற்றுங்கள். மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக இப்போராட்டம் 2024 வரை கூட தொடரலாம். எனவே உறங்குவதற்கும், உண்ணுவதற்கும், சம்பாதிப்பதற்கும் நேரம் ஒதுக்குவது போல, இனி தினமும் வாழ்வுரிமைக்காக போராடுவதற்கும் நேரம்
உயிரைவிடஉரிமை மேலானது,தஞ்சை பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!
தஞ்சை.பிப்.9., தஞ்சாவூரில் மத்திய அரசின் குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கூட்டியக்கம் சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ரமணி, தமுஎச அமைப்பை சேர்ந்த சுந்தரவள்ளி, அய்யாவழி தர்மயுக வழிப்பேரவை நிறுவனர் பாலமுருகன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது... நாம் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். சமூக நீதியை, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க குரல் கொடுக்கிறோம். இதை புரிந்துக் கொண்டு இப்போது எல்லா மக்களும் களத்தில் இணைய தொடங்கி விட்டார்கள். இது மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறி விட்டது.. இப்போராட்டம் உடனடியாக முடிவது போல தெரியவில்லை. மத்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது. எனவே நீண்ட நெடிய போராட்டத்திற்கு தயாராக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. நமது நேரம், பொருளாதாரம், உழைப்பு அனைத்திலும் பெரும்பகுதியை செலவிட வேண்டியது தவிர்க்க முடியாதது. நம் நாட்டின் விடுதலை போராட்டம் ஒரிரு வருடங்களில் முடியவில்லை. அது நூற்றாண்டை தாண்டி நடைப்பெற்றது. அது போல இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். பாஸிஸ்ட்டுகளிடமிருந்து நாட்டை மீட்கும் அறப்போராட்டம். நம் முன்னாள் இரண்டு தான் உள்ளது. அநீதிகளையும், உரிமைப்
முன்பு ரஜினி பாரதிராஜா இயக்கத்தில் நடித்தார்.! இப்போது பாரதீயஜனதா இயக்கத்தில்! முதமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!
சென்னை.பிப்.7.., இன்று சென்னை மண்ணடி மெட்ரோ அருகில், குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பாஜக-வுக்கு உடன்படும் காரணத்தால், வருமான வரித்துறையின் நெருக்கடிகளிலிருந்து ரஜினிகாந்த் காப்பாற்றப்படுகிறார் என்றும், பாஜக-வுக்கு உடன்படாத காரணத்தினால் நடிகர் விஜய் வருமான வரித்துறையின் நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுகிறார் என்றும் கூறினார். அப்படி தொடர்ந்து நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுத்தால், தமிழக மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்றார். ரஜினிகாந்த் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு ஆதாரவாக பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், முன்பு ரஜினிகாந்த் பாரதிராஜா படத்தில் நடித்தார், இப்போது பாரதீய ஜனதா இயக்கத்தில் நடிப்பதாக கூறினார். அந்தப் படங்கள் ஒடியது என்றவர், இந்த படங்கள் ஓடாது என்றும் கூறினார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம் 07-02-2020 https://m.facebook.com/story.php?story_fbid=2260785704021192&id=700424783390633