#மஜக_மாநில_பொருளாளர்_எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது_பங்கேற்பு..!! சென்னை.ஜூன்.06., மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் குறித்தான நினைவேந்தல் நிகழ்ச்சி, காணொளி காட்சி மூலமாக (Zoom) விசிக தலைவர் தொல்.திருமாவளவன் MP அவர்கள் தலைமையில் கடந்த (04.06.2021) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு மறைந்த முஹம்மது யூசுப் அவர்களின் நினைவுகள் மற்றும் மஜக-விற்கும் அவருக்குமான தோழமையை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் விசிக தொண்டர்கள் நேரலை மூலமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 04.06.2021
Tag: MJK Party
உலமாக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்!
#தமிழக_அரசுக்கு_மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_கோரிக்கை! கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல தரப்பையும் தமிழக அரசு அடையாளம் கண்டு உதவி வருவது பாராட்டுக்குரியது. இவர்களில் உலமாக்கள், மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களும், அடங்குவர் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் உள்ளிட்ட பள்ளி பணியாளர்கள், தர்ஹா பணியாளர்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவித்தொகையை இத்தருணத்தில் வழங்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வக்பு வாரியத்தின் மூலமாக இதற்கான ஏற்பாடுகளை செய்தால், சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவர். இதை கனிவுடன் பரீசீலிக்குமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 04.06.2021
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!
ஜுன்.02., கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் MP அவர்களை சந்தித்து தற்போதைய கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை கள நிலவரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இதில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கொரானா சிகிச்சை பற்றியும் அதில் மேம்படுத்த வேண்டியவை பற்றியும் ஆலோசித்தனர். மஜக நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்ட MP அவர்கள் நோயாளிகளுக்கு ஏதேனும் தேவை ஏற்படுமாயின் உடனடியாக தெரிவிக்குமாறும் அதன் பெயரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் நோயாளிகளுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவது சம்பந்தமாக பயிற்சி பெற்ற ஆலோசகர்களை தன்னார்வ பணிக்கு தாங்கள் பயன்படுத்த வேண்டும் என மஜகவினர் கோரிக்கை வைத்தனர். இதற்காக முன் வடிவ திட்டமும் பாராளுமன்ற உறுப்பினரிடம் இரு தினங்களில் வழங்கப்படும் என மஜக வினர் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமது அஷ்ரப் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 02.06.2021
அமைச்சரை சந்தித்து ஊரின் கோரிக்கைகளை கையளித்த மஜக!
ஜூன்.01, நேற்று நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட துளசியாப்பட்டினத்தில் ஆய்வில் அமைச்சர் திரு.சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் ஈடுப்பட்டிருந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்த மஜக நிர்வாகிகள் சலீம், இப்ராஹீம் ஷா தலைமையில் சந்தித்து ஊரின் தேவைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். அதனை பெற்று கொண்டு உடன் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
பொதக்குடியில் மஜகவினரின் ஆக்ஸிஜன் பணி!
திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொதக்குடி சுற்றுவட்டார பகுதி மக்களின் உயிர் காக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு நபர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற்று கொடுக்கப்பட்டதையும் தொடர்ந்து மேலும் தேவைகள் அதிகரித்தால் புதிதாக இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கப்பட்டு தேவையுடையவர்கள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.