கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

ஜுன்.02., கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் MP அவர்களை சந்தித்து தற்போதைய கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை கள நிலவரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

இதில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் கொரானா சிகிச்சை பற்றியும் அதில் மேம்படுத்த வேண்டியவை பற்றியும் ஆலோசித்தனர்.

மஜக நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்ட MP அவர்கள் நோயாளிகளுக்கு ஏதேனும் தேவை ஏற்படுமாயின் உடனடியாக தெரிவிக்குமாறும் அதன் பெயரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் நோயாளிகளுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்குவது சம்பந்தமாக பயிற்சி பெற்ற ஆலோசகர்களை தன்னார்வ பணிக்கு தாங்கள் பயன்படுத்த வேண்டும் என மஜகவினர் கோரிக்கை வைத்தனர்.

இதற்காக முன் வடிவ திட்டமும் பாராளுமன்ற உறுப்பினரிடம் இரு தினங்களில் வழங்கப்படும் என மஜக வினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகமது அஷ்ரப் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
02.06.2021