ஜெருசலேம் விவகாரம், அமெரிக்காவை கண்டித்து வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில துணை செயலாளர் பங்கேற்பு..!!

image

image

image

வேலூர். டிச.22., இஸ்லாமியர்களின் புனித நகரமான ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகரமாக, அறிவித்த அமெரிக்க அதிபரை கண்டித்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று (22.12.2017) ஜும்மா தொழுகைக்குப் பிறகு ஜமியதே உலமாயே ஹிந்த் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் J.M.வசீம் அக்ரம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்