சிறைத்துறை டிஐஜியுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

image

கோவை.டிச.22., கோவை மத்திய சிறையில் சில நாட்களுக்கு முன் தமுமுக வை சேர்ந்த இரு சகோதரர்கள் தாக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து மஜக சகோதரர் இம்தியாஸ் அவர்களும் தலைமை காவலர் பூபதி, என்பவரால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த மனித உரிமை மீறலை கண்டித்து மஜக மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் சிறைத்துறை டிஐஜி,  அவர்களை சந்தித்து சிறையில் சில நாட்களாக சமூக வழக்குகளில் வரும் நபர்கள் தாக்கப்படுவதாகவும் குறிப்பாக காவலர் பூபதி என்பவர் தான் இத்தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அவர் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், விவசாயஅணி மாவட்டசெயலாளர் அன்வர், ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
22.12.17