புத்துணர்ச்சியுடன் நடைபெற்ற தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு..!

image

image

image

image

குடந்தை.அக்.30.,மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 29/10/2017 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் கும்பகோணம் அனஸ் செஸ்டாரண்டில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் இமாம் ரசூல் மைதீன் அவர்கள் நீதி போதனையுடன் ஆரம்பித்துவைக்க, புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட செயலாளர் முஹம்மது மாஃரூப் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

அதனை தொடர்ந்து பொருளாளர்  இக்பால் சேட் அவர்கள் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி பற்றியும் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் பற்றியும் ஜனநாயக படுகொலை செய்யப்பட்ட டிசம்பர் 6 அன்று இரயில் மறியல் போராட்டம் பற்றியும் சிறு உரை ஆற்றினார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்