வாட்ஸ்அப்பில் வந்த தகவலை தொடர்ந்து களத்தில் இறங்கியது மஜக..!

image

image

image

வேலூர்.அக்.28., வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள உடையேந்திரம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ஹைதர் அலி மசூதிக்கு செல்லும் வழியில் சில சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது என்று இரண்டு நாட்களாக வாட்ஸ் ஆப்பில் ஒரு காணொளி காட்சி வந்தது.

அந்த காணொளியை கண்டதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர்
ஜே.எம். வசீம் அக்ரம் தலைமையில்,
மஜக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் P.M.ஷபீவுல்லாஹ்,
முன்னாள் நகரமன்ற உறுப்பினர் V.அப்துல்லாஹ், S.M. ஜீலான் ஆகியோர் ஹைதர் அலி பள்ளிவாசலுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வு முடிந்தவுடன் மஜகவின்  மாநில துணை செயலாளர்
J.M.வசீம் அக்ரம் அவர்கள்,
தமிழக தொழிலாளர் மற்றும் வக்பு வாரிய அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களை தொடர்பு கொண்டு மேற்கண்ட பிரச்சனை பற்றியும், எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும் எடுத்துக் கூறினார்.

அதை அடுத்து சம்பந்தபட்ட பள்ளிவாசல் பாதையை சீரமைக்க அதிகாரிகளிடமும், சமூகவிரோத செயல்களை ஒடுக்க காவல் துறையினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. 

நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் மேற்கண்ட இடத்தை சீர்செய்வதாக உறுதி அளித்தனர்.

இந்நிகழ்வில் மஸ்ஜித் நிர்வாகி அஹ்மத் பாஷா, பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோகன், நவீத், அப்சல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
27.10.2017