You are here

குளிக்கச்சென்ற இளைஞர்கள் வாகன விபத்து ஒருவர் பலி!! மஜக பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல் !

image

image

image

நெல்லை.அக்.23., திருநெல்வேலி மேற்கு மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சுத்தமல்லி டேமில் குளிக்க சென்றவிட்டு திரும்பும் நிலையில் சாலைவிபத்தில் சிக்கியுள்ளனர்.

இதில் காயிதேமில்லத் தெருவை சேர்ந்த சலீம் என்ற இளைஞர் பலியாகியுள்ளார். இன்னும் நான்கு இளைஞர்கள் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து செய்தி அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, நேரில் சென்று மரணமடைந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், விவசாயிகள் அணிச் செயலாளர் நாகை முபாரக், நெல்லை மாவட்ட செயலாளர் கலீல், பொருளாளர் சேக், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் வாஹித், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் வாஸீம் முபாரக், மேலப்பாளையம் நிர்வாகி மீரான் மெய்தீன் ஆகியோர் உடன் சென்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்
23_10_17

Top