மேலப்பாளையத்தில் வியாபாரிகள் சங்கம், வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் மஜக பொதுச்செயலாளரிடம் மனு..!!

image

image

நெல்லை.அக்.23., திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளில் கூடுதல் வரிவிதிப்பு என்ற பெயரில் பல மடங்கு சொத்து வரியினை உயர்த்த வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்து வருகிறார்கள்.

வீடுகள் மற்றும் கடைகளை அளவு செய்வதனை நிறுத்த கோரியும் வரி உயர்வை கைவிடக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்துமாறு மேலப்பாளையம் வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அனைத்து கட்சிகள், அனைத்து அமைப்புகள் மேலப்பாளையம் அனைத்து வியாபாரிகள் சங்கம், மேலப்பாளையம் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு மற்றும் நுகர்வோர் கண்காணிப்பகம் சார்பில் இந்த கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மனுவையும், விளக்கத்தையும் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதலமைச்சரிடம் விரைவாக பேசுவதாக உறுதியளித்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_கிழக்கு_மாவட்டம்