வேலூர் மாநகராட்சி பொறியாளரிடம் மஜகவினர் மனு..!

image

image

image

வேலூர்.அக்.21.,வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 53-வது வார்டு R.N.பாளையம், ஜானீபூந்தோட்டம், சின்னையா லேவுட், புதுதெரு, ஜன்டாதெரு ஆகிய பகுதிகளில் சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், தெருவிளக்குகள், சீரமைத்து தரவும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்ரமணி அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சி 53 வது வார்டு கிளை சார்பாக மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்று உடனடியாக இளநிலை பொறியாளர் செல்வராஜ் அவர்கள் மேற்கண்ட பகுதிகளை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை சீரமைத்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி, முன்னால் மாநகர செயலாளர் தாஜுதீன் அஸ்கர், 53வது வார்டு கிளை செயலாளர் ஜியாவுத்தின் கலீம், முன்னால் கிளை துணை செயலாளர் சாதிக் பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
21.10.2017