மூன்று ஊராட்சிக்குட்ப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் முகாம்

image

image

திருவாரூர்.அக்.16., திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் ஊராட்சியில் உள்ள மாணவ மாணவியர்க்களுக்கு கட்டிமேடு மற்றும் ஆதிரெங்கம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாம் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மஜக திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஷாகுல் ஹமீது அவர்களும், மஜக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கட்டிமேடு ஆசிப் முன்னிலை வகுத்தனர்.

இதில் கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ,ஷா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆதிரெங்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சேகல் ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு சுகாதாரத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர்.

மேலும் கட்டிமேடு கிளை துனை செயலாளர் ஹாரிஸ், மருத்துவ அணி செயலாளர் ஆசிக், ஆதிரெங்கம் கிளை செயலாளர் அப்துல்லா, இளைஞர் அணி செயலாளர் உசேன் அலி, மருத்துவ அணி செயலாளர் பைசல் நிர்வாகிகள் மஜக தொண்டர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இறுதியாக மஜக திருத்துறைப்பூண்டி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அசீம் அலிம் நன்றி கூறினார்.

தகவல்;-

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WINGS
#கட்டிமேடு_ஆதிரெங்கம்
#திருவாரூர்_மாவட்டம்