திருப்பூர் மாவட்டத்தில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

image

image

image

திருப்பூர் .அக்.15., மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பில் செரங்காடு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

மஜகவின் திருப்பூர் மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
மாவட்ட பொருளாளர் S.முஸ்தாக் அஹமது அவர்கள் முன்னிலை வகித்தார்.

செரங்காடு பள்ளிவாசல் அருகே நடைபெற்ற இம்முகாமில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் M.காதர்கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஜ்வான், செரங்காடு கிளை பொறுப்பாளர்கள் J.அப்துல் அக்கிம், J.நஸ்ருதீன், M.முகம்மது ஆசிப், B.அப்பாஸ், B.காதர்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

மஜகவின் செயலவீரர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினர் மேலும் அவ்வழியே சென்ற பொதுமக்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக வந்து பயன் பெற்றனர்.

அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நிர்வாகி தோழர் மூர்த்தி அவர்கள் மஜகவின் மக்கள் நல பணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த முகாம் ஏற்பாடுகளை
செரங்காடு J.செளகத் அலி அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
15/10/2017