IKP தம்மாம் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி..

image

image

தம்மாம்.செப்.12., இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஈகை பெருநாள் சந்திப்பை தொடர்ந்து, கடந்த 08/09/2017 வெள்ளி கிழமை தம்மாம் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு HOLIDAY ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் #செய்யது_அலி அவர்கள் தலைமை வகிக்க பொருளாளர் ஹஜ் முகம்மது முன்னிலை வகித்தார்கள்.

இந்த கூட்டத்தில் துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள், துணை செயலாளர் நாகூர் ஜாகிர் உசேன் அவர்கள், ஊடக துறை செயலாளர்  சாஹிப் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் தம்மாம் சீகோ கிளை தொடங்குவது என்று முடிவெடுக்கபட்டது, தம்மாம் மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்க புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் புதிதாக தம்மாம் சீகோ கிளையில் பொறுப்பேற்க உள்ள கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இனிதே கூட்டம் நிறைவு பெற்றது.

தீர்மானங்கள்.

1) IKP உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது புதிய கிளைகள் தொடங்குவது.

2) IKP யின் மருத்துவ அணியின் செயல்பாட்டை ஊக்குவித்து சவுதி முழுவதும் இரத்ததான சேவையை துரிதபடுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகவல்:
#IKP_ஊடக_பிரிவு
#தம்மாம்_மண்டலம்