தூத்துக்குடி (தெ) மாவட்டம் மஜக ஆத்தூர் கிளையின் சார்பாக கிரிக்கெட் போட்டி..!

image

image

தூத்துக்குடி.செப்.04., கடந்த 20-08-2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் M.com அவர்கள் மஜக ஆத்தூர் கிளையின் சார்பாக நடத்தப்படும் கிரிக்கெட் சுற்று போட்டியை துவக்கி வைத்து இளைஞர்களுக்கு சிறப்பான உற்சாகத்தை அளித்தார்.

அதன் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இறுதி போட்டியை மஜக மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்கள் துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து இறுதி போட்டியில் கலந்து கொண்ட இரண்டு அணிகளையும் உற்ச்சாகப்படுத்தினார்.
பின்பு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஆத்தூர் நகர செயலாளர் M.P.முருகானந்தம், மஜக மாவட்ட துணை செயலாளர் A.முகம்மது நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆத்தூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆத்தூர் கிளை செயலாளர் அன்வர் பாஷா தலைமையில் நிர்வாகிகள் ஹாஜா, இப்ராஹிம், அரஃபாத், அஃப்சர், அல்தாஃப், ஹாரிஸ், நவாஸ், ரியாஸ், ராஜா முகம்மது ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
03-09-2017