திருச்சி மாநராட்சி ஆணையருக்கு மஜக மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை..!

திருச்சி.செப்.1., மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக)
திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் மாநகராட்சி ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளை (02.09.17) முஸ்லிம்களின் பண்டிகையிள் ஒன்றான தியாகத் திருநாள்
(ஹஜ் பெருநாள் )  தினம் என்பதால் இந்த தினத்தன்று வீட்டில் வளரும் பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவைகளை அறுத்து பலியிடுவது
இஸ்லாமியர்கள் வழக்கம்,
இறைவனுக்கு செய்யும் வழிபாடு ஆகும்.

இந்த பண்டிகை மூன்று நாட்கள் வரை கொண்டாப்படும் என்பதால் 02,03,04-09-2017 ஆகிய  மூன்று தினங்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு வழங்கப்படது. மனுவை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர் பொருப்பாளர்  அமுதவள்ளி அவர்கள் உடனே நாளை கண்டிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர்
வழங்க உத்தரவிட்டார்.

இதில் திருச்சி மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் (#மஜக) மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மொய்தீன் அப்துல்காதர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருச்சி_மாநகர்.
01.09.2017.