மஜக-வின் வேலூர் (மே)மாவட்ட சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி!

image

image

image

வேலூர்.ஆகஸ்ட்.15., இன்று இந்திய திருநாட்டின்  71-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்டம்    சார்பாக ஆம்பூரில் தேசிய கொடி ஏற்றம் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் T.D.அப்ரோஸ் அஹமத் தலைமையில்  நடைபெற்றது.

அன்பை விதைத்து!
அமைதி காத்து!
வேற்றுமை மறந்து!
ஒற்றுமை பேணி!
வளமிக்க தாயகத்தை!  ஒன்றுபட்டு கட்டமைப்போம்! 

என்ற வீரிய முழக்கத்தோடு தேசிய கொடியை வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர்
S.M.D.நவாஸ் அவர்கள் ஏற்றி வைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

பள்ளிக்கூடங்களில் படிக்கின்ற ஏழை மாணவ, மாணவிகளுக்கு
இலவச நோட்டு புத்தகம் பேனா, பென்சில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அக்பர் பாஷா,
1-வது வார்டு கிளை செயலாளர் ஷயின்ஷா, நிர்வாகிகள் ஜமாலுத்தீன், அஸ்கர் அலி, முபாரக், எதிஷாம்,நகர கிளை நிர்வாகிகள் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள், பொது மக்கள் என அனைவரும்  கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

தகவல்:-
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
ஆம்பூர் நகரம்
வேலூர் (மே) மாவட்டம்
15/08/2017.